Padithen Padithen Kadhal |
---|
பாடலாசிரியர் : வாலி
படித்தேன் படித்தேன் காதல் பாடம் இதுதான் இதுதான் பள்ளிக்கூடம் இனி மேல் உன்னோடுதான் எந்நாளும் இருப்பேன் பின்னோடுதான்
தவித்தேன் சொல்லாமல்தான் அன்றாடம் தூக்கம் இல்லாமல்தான் மயக்கம் கொடுக்கும் மாலை நேரம் ஓ
படித்தேன் படித்தேன் காதல் பாடம் இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்
பூவாரம் போடாமல் புள்ளி மயில் வாடுது என் நெஞ்சும் ராஜாவே உன்னைச் சுற்றி ஓடுது பூவாரம் போடாமல் புள்ளி மயில் வாடுது என் நெஞ்சும் ராஜாவே உன்னைச் சுற்றி ஓடுது
அந்தி வெயில் காய்ந்தாலும் அங்கம் எல்லாம் கூசுது சந்திரனைப் பார்த்தாலும் செந்தனலாய் தோன்றுது
நீ தீண்ட நான் தீண்ட நினைக்கையில் இனித்திடும் இனித்திடும்
படித்தேன் படித்தேன் காதல் பாடம் இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்
நான் போடும் பொன் விலங்கு மஞ்சள் நிறத் தாலிதான் உனக்காகப் போட்டதல்ல எனக்கான வேலி தான் நான் போடும் பொன் விலங்கு மஞ்சள் நிறத் தாலிதான் உனக்காகப் போட்டதல்ல எனக்கான வேலி தான்
கண் இரண்டும் மூடாமல் கட்டில் கதை பேசவும் உன் உடம்பு வேர்க்காமல் காற்று வந்து வீசவும்
பூந்தேனே பொன் மானே உனைத் தொட எனக்கொரு வரம் கொடு
படித்தேன் படித்தேன் காதல் பாடம் இதுதான் இதுதான் பள்ளிக்கூடம் இனி மேல் உன்னோடுதான் எந்நாளும் இருப்பேன் பின்னோடுதான்
தவித்தேன் சொல்லாமல்தான் அன்றாடம் தூக்கம் இல்லாமல்தான் மயக்கம் கொடுக்கும் மாலை நேரம் ஓ
படித்தேன் படித்தேன் காதல் பாடம் இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்