Penmani Ava Kanmani |
---|
பெண்மணி அவ கண்மணி பெண்மணி அவ கண்மணி
பத்து மாசம் சொமந்திருந்து பெத்திடுவா பெண்மணி பெத்தவன சொத்துக்காக வித்திடுவா கண்மணி புருஷனுக்கு தன்னுயிர கொடுத்திடுவா பெண்மணி அதுக்கு முன்னே அவன் உசிர எடுத்திடுவா கண்மணி
பெண்மணி அவ கண்மணி பெண்மணி அவ கண்மணி
சீரு செனத்தி சேரும் வரைக்கும் விடுவாளா பெண்மணி நாத்து மொளச்சா பாத்து தடுப்பா வளையாத கண்மணி மாமியார் சொல்லத்தான் மீறினா ராசாத்தி அடிபட்ட பாம்பாட்டம் சீறுமே இவ புத்தி
பெண்ணினத்தின் விடுதலைக்கு கொடி பிடிக்கும் பெண்மணி பாரதத்தில் இன்னும் உண்டு அவதானே கண்மணி பூவாகத் தோணுறா புயலாவும் மாறுவா
பெண்மணி அவ கண்மணி பெண்மணி அவ கண்மணி
மெத்த படிச்சி வேல கிடச்சி தொழில் பார்க்கும் பெண்மணி வந்த இடத்தில் சொந்த பலத்தில் அரசாளும் கண்மணி மாமியார் சோறாக்கும் பாவியா ஆயாச்சு மாமனார் மானஸ்தன் ஆவியா போயாச்சு
பெண்ணுக்கிங்கு பெண்ணாலதான் சோதனைகள் நேருமா கண்ணுக்கிங்கு கண்ணாலதான் காயம் வரக் கூடுமா புரிஞ்சாத்தான் பெண்மணி வளஞ்சாத்தான் கண்மணி
பெண்மணி அவ கண்மணி பெண்மணி அவ கண்மணி
கொண்ட கணவன் நித்தம் குடிச்சும் குலங்காக்கும் பெண்மணி பெத்த மகனும் தண்ணியடிச்சா கலங்காதோ கண்மணி நாயகன் கொஞ்சாம நாளெல்லாம் போயாச்சு வாடுறா பூங்கோதை வாலிபம் வீணாச்சு
கட்டுக்குள்ள வச்சிடணும் கணவனத்தான் பெண்மணி கட்டுப்பட்டும் நடந்திடணும் அவதானே கண்மணி பசியோடும் வாடுவா ருசியோடும் வாழுவா
பெண்மணி அவ கண்மணி பெண்மணி அவ கண்மணி
பத்து மாசம் சொமந்திருந்து பெத்திடுவா பெண்மணி பெத்தவன சொத்துக்காக வித்திடுவா கண்மணி புருஷனுக்கு தன்னுயிர கொடுத்திடுவா பெண்மணி அதுக்கு முன்னே அவன் உசிர எடுத்திடுவா கண்மணி
பெண்மணி அவ கண்மணி பெண்மணி அவ கண்மணி