Aadalama Annanadai

Aadalama Annanadai Song Lyrics In English


பாடலாசிரியர் : கண்ணதாசன்



ஆடலாமா அன்னநடை பின்னலிட ஆசை பொங்கும் சொந்தமல்லவோ ஆடலாமா அன்னநடை பின்னலிட ஆசை பொங்கும் சொந்தமல்லவோ

பாடலாமா பள்ளியறை பாடல் ஒன்று பாசமுள்ள பந்தமல்லவோ பாடலாமா பள்ளியறை பாடல் ஒன்று பாசமுள்ள பந்தமல்லவோ

வண்ண செந்தூரம் மின்னலிடும் பாவை வந்து நின்றாலே வேறு என்ன தேவை வண்ண செந்தூரம் மின்னலிடும் பாவை வந்து நின்றாலே வேறு என்ன தேவை

உன்னை காணாமல் இன்று என்ன வேலை உள்ளம் தாளாமல் வந்தது இந்த சோலை உன்னை காணாமல் இன்று என்ன வேலை உள்ளம் தாளாமல் வந்தது இந்த சோலை

ஆடலாமா அன்னநடை பின்னலிட ஆசை பொங்கும் சொந்தமல்லவோ பாடலாமா பள்ளியறை பாடல் ஒன்று பாசமுள்ள பந்தமல்லவோ

முள்ளென்று சொன்னாலும் பூவென்று சொன்னாலும் ரோஜாவின் பேரல்லவோ

கல்லென்று சொன்னாலும் கனியென்று சொன்னாலும் கல்யாணி நானல்லவோ

முள்ளென்று சொன்னாலும் பூவென்று சொன்னாலும் ரோஜாவின் பேரல்லவோ

கல்லென்று சொன்னாலும் கனியென்று சொன்னாலும் கல்யாணி நானல்லவோ


உள்ளத்தில் ஒன்றாக சொல்லோடு ஒன்றாக சொல்லாத பெண்ணல்லவோ உன் பேரை அல்லாமல் வேறெந்த பேர் மீதும் சாயாத கண்ணல்லவோ

ஆடலாமா அன்னநடை பின்னலிட ஆசை பொங்கும் சொந்தமல்லவோ பாடலாமா பள்ளியறை பாடல் ஒன்று பாசமுள்ள பந்தமல்லவோ



குயிலென இசை கொண்டு மயிலென நடை கொண்டு உரிமை சிறகும் கடமை மொழியும் நிறைந்தவளே எனது மடியில் உலகம் முழுதும் மறந்தவளே

சங்கீதம் பாடுகின்றாள் என் சந்தோசம் நாடுகின்றாள் சங்கீதம் பாடுகின்றாள் என் சந்தோசம் நாடுகின்றாள் என்னோடு ஆடுகின்றாள் தன் கண்ணாலே பேசுகின்றாள்

ஆடலாமா அன்னநடை பின்னலிட ஆசை பொங்கும் சொந்தமல்லவோ பாடலாமா பள்ளியறை பாடல் ஒன்று பாசமுள்ள பந்தமல்லவோ

சந்தன மோகினி குங்கும ராகினி மங்கல மேகலை பொங்கிய தேவதை ரதியும் நதியும் இவளே

வேங்கட மாலவன் வள்ளியின் வேலவன் கன்னி நாயகன் மன்னவன் மாதவன் கனவும் நினைவும் இவனே

எனக்கொரு புதுமுகம் கொடுத்தவள் நீயடி நினைக்கையில் இனிக்குது மணந்தவன் காலடி எடுக்க எடுக்க வளரும் கலைகள் உனதே எடுக்க எடுக்க வளரும் கலைகள் உனதே ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ