Aasaithan Nenjin Osaithan |
---|
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் , ஏ எல் ராகவன்,
டி கே கலா மற்றும் பி எஸ் சசி ரேகா
இசை அமைப்பாளர் : டி ஆர் பாப்பா
பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி
ஹேஹேலாலாலாலாலா ஹேஹேஓஆலாலாலாலல
ஆசைதான் நெஞ்சின் ஓசைதான் என்றும் வாய் பேசாமல் கண் கூசாமல் பேசும் பாஷைதான் காதல் தெய்வ சன்னிதானப் பூஜைதான்
நடையும் இடையும் துவள துவள நடனம் நீ ஆடு செடியில் தழுவி படரும் கொடியின் அழகை நீ பாடு
தனிமையொரு பூமேடை ஆஆ இனிமை தரும் தேன் ஓடை
மனதை மயக்குதே துணையை அழைக்குதே வாழ்க்கையின் கீதமே கேட்குதே
ஆசைதான் நெஞ்சின் ஓசைதான் என்றும் வாய் பேசாமல் கண் கூசாமல் பேசும் பாஷைதான் காதல் தெய்வ சன்னிதானப் பூஜைதான்
இளமை வரவு முதுமை செலவு என்று நீ பாடு இருக்கும் வரையில் எடுத்துக் கொடுத்து இன்பம் நீ தேடு
புலவர்களின் கண்ணோடு ஆஆ புதுமையொரு பொன் ஏடு
இணைந்தே படிக்கலாம் நினைந்தே ரசிக்கலாம்
ஈடில்லா சொர்க்கமே காணலாம் ஹேஹேஆஆஆஆ
ஆசைதான் நெஞ்சின் ஓசைதான் என்றும் வாய் பேசாமல் கண் கூசாமல் பேசும் பாஷைதான் காதல் தெய்வ சன்னிதானப் பூஜைதான்