Aatam

Aatam Song Lyrics In English


நீ நீயாக இருப்பதில் இல்லை பிழை நீ கேள்வி குறி என்றால் யார் இங்கு விடை இந்த பூவியினிலே யாரிடம் இல்லை குறை உணர்வுகள் உணர்ச்சிகள் சூழ்நிலை கரும் சிறை

கரை சேரும் வரை ஓயவில்லை அந்த அலை ஏற்ற தாழ்வு என்பதெல்லாம் ஒரு மன நிலை பிரேக் ஃபிரீ ஃறம் தேட் கற்பனை தரும் திரை எல்லோரும் நம் சொந்தம் யதார்த்தம் இந்த நிலை

புரியுதா உரைக்குதா உண்மைகள் உனக்கு தெரியுதா பதறுதா வருந்துதா எண்ணங்கள் சிந்தைகள் உடையுதா

லெவல் இட் அப் பேதங்கள் உடைந்து மனிதன் நம்முள்ளே கலந்து லெவல் இட் அப் பகையை துறந்து சிறகை விரித்து பறந்து ஆட்டம் எல்லாம் கொஞ்சம் காலம் கூட்டம் எல்லாம் வந்து போகும் தேடல் கூட ஓய்ந்து போகும் எது தான் இங்கே நிரந்திரம் ஆட்டம் எல்லாம் கொஞ்சம் காலம் கூட்டம் எல்லாம் வந்து போகும் தேடல் கூட ஓய்ந்து போகும் எது தான் இங்கே நிரந்திரம்

ஏன் ஒருமையை உணர மறக்கிறோம் ஏன் பொறுமையை இழந்து நிற்கிறோம் ஏன் வெறுமையில் வாழ்க்கை தொலைக்கிறோம் ஏன் வறுமைக்கோடு அழியாததேன்

நாடுகள் வேறுபாடுகள் ஏன் ஆயுதம் ஆட்சி செய்வதும் ஏன் மனிதமும் முழிக்க மறப்பதும் ஏன் சுதந்திரம் வெறும் பேச்சானதேன்

சிறுபொறி நெருப்பு தந்தவை யாவும் நாகரிகம் என மாற்றி விட்டோம் வானத்தை தாண்டி பூமியை தோண்டி இயற்கையை சீண்டி பார்த்து விட்டோம்

பேராசைகளின் விளைவுகள் யாவும் பேரலையாக பொங்காதோ மனிதன் என்னும் இனத்தாலே உலகம் முழுதும் சாகாதோ

ஹம்மிங் :

பொய்யை ஏன் கொண்டாடினோம் நேசிக்க ஏன் யோசித்தோம் பெருமை பீதி கொள்கிறோம் எதை நோக்கி போகின்றோம் குறையை சொல்லி புலம்பினோம் குரலை எழுப்ப தயங்கினோம் கண்மூடி வாய்பொத்தி செவி சாத்தி வாழ்க்கையை வாழ்கின்றோம்

மதியற்று தரங்கெட்டு வெறிகொண்டு சரிகட்டி சினுங்காதே வழிகாட்டு தலையாட்டி சிலைபோல சரியென்று நிற்காதே கோபத்தில் துரோகத்தில் குரோதத்தில் கிருமி போல் பரவாதே மோகத்தில் மதிகெட்டு உடைபட்டு போதையில் சரியாதே

இருவர் : ஆட்டம் எல்லாம் கொஞ்ச காலம் கூட்டம் எல்லாம் வந்து போகும் தேடல் கூட ஓய்ந்து போகும் எதுதான் இங்கே நிரந்திரம்


இருவர் : ஆட்டம் எல்லாம் கொஞ்ச காலம் கூட்டம் எல்லாம் வந்து போகும் தேடல் கூட ஓய்ந்து போகும் எதுதான் இங்கே நிரந்திரம்

எதிர்நீச்சல் போடவே துணிந்த சிறு மீனைப்போலே சூறாவளி காற்றிலே சிறகடித்திடும் பறவைபோலே

புயல் மோதும் வேகத்தின் வழு தாங்கும் மரத்தைப்போலே பூகம்ப அசரலும் மதிக்காதிருக்கும் மலைப்போலே

இருளாக உலகம் உன்னை சூழும்போதும் உனதுள்ளே தோன்றும் ஒளியை நோக்கி செல்லு

கண்ணாடி முன்னாடி பல பிம்பம் தெரியுது தள்ளாடி விண்ணோக்கு போ உன் முன்னே பல தடைகள் வந்தாலும் முன்னேரி பல குறைகள் இருந்தாலும் நெறியாக்கி நடைபோடு லைக் கில்லாடி யார் அறிவாளி யார் கோமாளி பகுத்தறிந்து வாழ்பவன் முன்னாேடி

புலம்பி குழம்பி இருக்காதே நீர் தளும்பி கனந்து நிற்காதே மனம் தளராதே நீ பதறாதே உடையாத கல் சிலை ஆகாதே

இருவர் : ஆட்டம் எல்லாம் கொஞ்ச காலம் கூட்டம் எல்லாம் வந்து போகும் தேடல் கூட ஓய்ந்து போகும் எதுதான் இங்கே நிரந்திரம்

இருவர் : ஆட்டம் எல்லாம் கொஞ்ச காலம் கூட்டம் எல்லாம் வந்து போகும் தேடல் கூட ஓய்ந்து போகும் எதுதான் இங்கே நிரந்திரம்

பொய்யை ஏன் கொண்டாடினோம் நேசிக்க ஏன் யோசித்தோம் பெருமை பீத்தி கொள்கின்றோம் எதை நோக்கி போகின்றோம் குறை சொல்லி புலம்பினோம் குரலை எழுப்ப தயங்கினோம் கண்மூடி வாய்பொத்தி செவி சாத்தி வாழ்க்கையை வாழ்கின்றோம்

மதியற்று தரங்கெட்டு வெறிகொண்டு சரிகட்டி சினுங்காதே வழிகாட்டு தலையாட்டி சிலைபோல சரியென்று நிற்காதே கோபத்தில் துரோகத்தில் குரோதத்தில் கிருமி போல் பரவாதே மோகத்தில் மதிகெட்டு உடைபட்டு போதையில் சரியாதே