Aatha Thottilile

Aatha Thottilile Song Lyrics In English


ஒப்பாரி :

ஆத்தா தொட்டிலிலே அரை நாழி ஆடலியே
அப்பன் தோள்மேல அம்பாரி ஏறலையேஆஅ
ஆத்தா தொட்டிலிலே அரை நாழி ஆடலியே
அப்பன் தோள்மேல அம்பாரி ஏறலையேஆஅ

தாய் ஊட்டி திங்கலையே
தகப்பன் இடம் தங்களையே
நீயூட்டி வளர்த்தபுள்ள
தீ மூட்ட நிக்கிறானே

தாய் ஊட்டி திங்கலையே
தகப்பன் இடம் தங்களையே
நீயூட்டி வளர்த்தபுள்ள
தீ மூட்ட நிக்கிறானே

அம்மான்னு பள்ளியிலே
அரிச்சுவடி படிக்கையிலே
அக்காதான் எல்லாம்னு
எண்ணி எண்ணி வளந்தேனே

குஞ்சுக்கு பஞ்சாரம்
கொடங்கையிலே இருந்ததடி
பஞ்சாரம் கலந்ததடி
பாதி உயிர் அருந்ததடி

ஒப்பாரி :

குடிச்ச தாய் பாலு
குமட்டில் இருக்கையிலே
இடி வந்து விழுந்ததுன்னு
எல்லாரும் சொன்னங்க
பாசத்த பறிகொடுத்து
பாதிவழி நிக்கிறேனே
வம்சத்த பலிகொடுத்து
வழியத்து போனேனே

எல்லாமாதான் இருந்து
இத்து போனவளே
சொல்லாம போனதெங்க
துடிக்குதடி என் உசுரு


ஈ எறும்பு அண்டும்னு
இமைக்காம இருந்தவளே
ஊருமுக்க வந்திருச்சு
உறங்குறியே முழிப்பதெப்போ

மாடு அலறலையே
வலிபூனை மறிகலையே
காட சாக்குருவி
கத்திதான் கொலைக்கலையே
குடி கவுர போகுதுன்னு
கெவுளியும் சொல்லலையே
மாட வெளக்கனஞ்சு
மரணத்த கூறலையே

கட்டிலிலே குத்த வச்சு
கால் அமுக்க நினைச்சிருந்தேன்
ஆள் இல்லா கட்டிலிலே
கண்ணுறக்கம் கொண்டது ஏன்

ஊர் மாலை நான் வாங்கி
உன் ஆசை வாங்குமுன்னே
நீர் மாலை ஊர் எடுக்க
நெடுந்தூக்கம் கொண்டது ஏன்

ஈராறு சாரத்தில்
ஏற்றி வர நானிருக்க
ஓராரு அடிக்குள்ளே
உள்ளுறங்க போனது ஏன்

என் ஆத்தாஆஅஆ
என் ஆத்தா
என் ஆத்தா

ஒப்பாரி :
ஆத்தா