Aathora Aalamaram |
---|
ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா கூடு கட்டும் கிளிகள் ரெண்டு வேதனையில் வாடுதம்மா
ஆத்தோர ஆலமரம்
உறவாடும் கிளியே கிளியே உனக்காக பாடல் ஒன்று உயிரோடு உயிராய் கலந்து கரைகின்றதே தூங்காத கண்கள் ரெண்டு தாலாட்டு கேட்டது பூபாளம் பாடும் கிளியோ சிறையானதே
மனம் வேறு செயல் வேறு இதுதானே தகராறு மனம் வேறு செயல் வேறு இதுதானே தகராறு கண்ணீர் கதையா பெண் கொண்ட வரலாறு
ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா கூடு கட்டும் கிளிகள் ரெண்டு வேதனையில் வாடுதம்மா
ஆத்தோர ஆலமரம்
கட்டிக் காத்த சுடலை கட்டவிழ்த்து போகையிலே கண்டும் காணா இருந்த பெண்டு பிள்ளைகள் மருகி மருகி நிற்கையிலே எஞ்சாமி சுடலையாண்டி மலையேற பாக்குறான்டி சாதி சனம் அத்தனையும் கண் கலங்கி நிக்குதடி
இவள் கொண்ட தாலியை தங்கை சரிபாதி கேட்பதா இவள் வீட்டு பாயில் வந்து இடம் கேட்பதா மாறாத உண்மைகள் கூட மௌனங்கள் ஆவதா ஆறாத காயத்தில் வந்து அனல் வீழ்வதா
விளக்கெல்லாம் அணைந்தாலும் விடியாமல் போகாது விளக்கெல்லாம் அணைந்தாலும் விடியாமல் போகாது விடியல் வந்தால் கீழ்வானம் தூங்காது
ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா கூடு கட்டும் கிளிகள் ரெண்டு வேதனையில் வாடுதம்மா
ஆத்தோர ஆலமரம்