Aavaram Poo |
---|
ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே யாருக்கு காத்திருக்கு அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு
சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே யாருக்கு காத்திருக்கு அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு
காற்றில் ஆடி தினந்தோறும் உனது திசையை தொடருதடா குழந்தை கால ஞாபகத்தில் இதழ்கள் விரித்தேக் கிடக்குதடா
நெடுநாள் அந்த நெருக்கம் நினைத்தே அது கிடக்கும் சருகுகள் சத்தம் போடும் தினம் சூழ்நிலை யுத்தம் போடும் அதன் வார்த்தை எல்லாம் மௌனமாகும்
சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே யாருக்கு காத்திருக்கு அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு
ஆயுள் முழுதும் தவம் கிடந்தே ஒற்றை காலில் நிற்குதடா மாலையாகி தவழ்ந்திடவே உனது மார்பை கேட்குதடா
பனியில் அது கிடக்கும் நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும் வண்ணங்கள் எல்லாம் நீதான் அதன் வாசங்கள் எல்லாம் நீதான் நீ விட்டு சென்றால் பட்டு போகும்
சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே யாருக்கு காத்திருக்கு அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு