Ada Vazhumbothu Manithane

Ada Vazhumbothu Manithane Song Lyrics In English


அட வாழும்போது மனிதனே ஒரு மலையாய் வாழடா அட வீழும் போதும் மண்ணிலே ஒரு விதையாய் வீழடா

இங்கு நாளைகள் என்பவை ஒரு நம்பிக்கைதானடா நீ எழுந்தால் போதும் இமயம் உனக்கு கீழடா

ஒரு வேடன் வேடன் வருகிறான் பலர் வேடம் கலைக்க விரைகிறான்

அட மண்ணில் வீழும் நீர்த்துளி அது மரணம் காணுமா அதன் வடிவம் தோற்றம் மாறலாம் உரு மறைந்தே போகுமா

நீ தீயாய் போய்விடு உனை ஈக்கள் தீண்டுமா அட பீனிக்ஸ் பறவை எரித்தால் கூட சாகுமா

ஒரு வேடன் வேடன் வருகிறான் பலர் வேடம் கலைக்க விரைகிறான்

அட மரத்தின் கிளைகள் வீழ்ந்தப்பின் அது மறுபடி துளிர்க்குமே அந்த வானில் நிலவு தேய்ந்தப்பின் அது மறுபடி வளருமே


கரும்பாறை இடுக்கிலும் சில வேர்கள் முளைக்குமே இதை உணர்வாய் மனிதா உனக்கும் நம்பிக்கை பிறக்குமே

புது வேடன் வேடன் நீயடா இனி வேங்கை மேலே பாயடா

இள ரத்தக்கறை கொண்ட லட்சியம் அது சாயம் போவதில்லையே பல தழும்பு வாங்கிய தத்துவம் என்றும் விழுந்து போவதில்லையே

என்றும் துணிந்தவன் வாழ்க்கையில் ஒரு தோல்வியும் இல்லையே அட கருமத்தை முடிப்பவன் பிறப்பதும் இறப்பதும் இல்லையே

உங்கள் வேடன் வேடன் வருகிறான் தர வேட்டை ஆட வருகிறான்