Ada Vazhumbothu Manithane |
---|
அட வாழும்போது மனிதனே ஒரு மலையாய் வாழடா அட வீழும் போதும் மண்ணிலே ஒரு விதையாய் வீழடா
இங்கு நாளைகள் என்பவை ஒரு நம்பிக்கைதானடா நீ எழுந்தால் போதும் இமயம் உனக்கு கீழடா
ஒரு வேடன் வேடன் வருகிறான் பலர் வேடம் கலைக்க விரைகிறான்
அட மண்ணில் வீழும் நீர்த்துளி அது மரணம் காணுமா அதன் வடிவம் தோற்றம் மாறலாம் உரு மறைந்தே போகுமா
நீ தீயாய் போய்விடு உனை ஈக்கள் தீண்டுமா அட பீனிக்ஸ் பறவை எரித்தால் கூட சாகுமா
ஒரு வேடன் வேடன் வருகிறான் பலர் வேடம் கலைக்க விரைகிறான்
அட மரத்தின் கிளைகள் வீழ்ந்தப்பின் அது மறுபடி துளிர்க்குமே அந்த வானில் நிலவு தேய்ந்தப்பின் அது மறுபடி வளருமே
கரும்பாறை இடுக்கிலும் சில வேர்கள் முளைக்குமே இதை உணர்வாய் மனிதா உனக்கும் நம்பிக்கை பிறக்குமே
புது வேடன் வேடன் நீயடா இனி வேங்கை மேலே பாயடா
இள ரத்தக்கறை கொண்ட லட்சியம் அது சாயம் போவதில்லையே பல தழும்பு வாங்கிய தத்துவம் என்றும் விழுந்து போவதில்லையே
என்றும் துணிந்தவன் வாழ்க்கையில் ஒரு தோல்வியும் இல்லையே அட கருமத்தை முடிப்பவன் பிறப்பதும் இறப்பதும் இல்லையே
உங்கள் வேடன் வேடன் வருகிறான் தர வேட்டை ஆட வருகிறான்