Adhikalaiyil Pani Kaatrugal |
---|
பாடலாசிரியர் : வைரமுத்து
அதிகாலையில் பனிக் காற்றுகள் வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு அதிகாலையில் பனிக் காற்றுகள் வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு
பூக்கள் விழித்து கண்கள் துடைத்து காலை வணக்கம் சொல்லும் தூங்கி கிடந்த சூரியன் எழுந்து சோம்பல் முறித்து கொள்ளும்
குளிக்கும்போது தெறிக்கும் துளியில் கோடி வைரங்கள் மின்னும் குளிக்கும்போது தெறிக்கும் துளியில் கோடி வைரங்கள் மின்னும்
அதிகாலையில் பனிக் காற்றுகள் வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு
அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து என்றும் அதுதான் இனிப்பு மருந்து அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து என்றும் அதுதான் இனிப்பு மருந்து
தோசை ஆறும் ருசியும் மாறும் முதலில் கைப்பற்ற முந்துஆஹாஹா தோசை ஆறும் ருசியும் மாறும் முதலில் கைப்பற்ற முந்து
அதிகாலையில் பனிக் காற்றுகள் வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு
பார்த்து புளித்து கசந்த போதும் பழகி போன பந்தம் உயிரில் நிறைந்து மனதில் வழிந்து சுகங்கள் வளர்க்கும் சொந்தம்
கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால் வாழ்வில் அன்பே மிஞ்சும் ஆஆ கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால் வாழ்வில் அன்பே மிஞ்சும்
அதிகாலையில் பனிக் காற்றுகள் வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு குளிரேஆஹ அஹாஆதீண்டாதிரு