Adi Aayi Aayi Aayi Aayi Kalyana

Adi Aayi Aayi Aayi Aayi Kalyana Song Lyrics In English


பாடகி : பி சுஷீலா

இசை அமைப்பாளர் : கே வி மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

அடி ஆயி ஆயி ஆயி ஆயி கல்யாண காலமடி கச்சேரி மேளமடி பொற்கோல மேடையிலே பூப்போட்ட வாசமடி

பூங்கொடி மணமகளோ புத்தாடை சூடுவாளாம் பொன்னான காலிரண்டை கண்ணாலே மோதுவாளாம்

கன்னிப்பெண் பார்வையிலே கணவனைத் தேடுவாளாம் கன்னிப்பெண் பார்வையிலே கணவனைத் தேடுவாளாம் கண் தன் கடவுளுக்கு நன்றியை கூறுவாளாம்


அடி ஆயி ஆயி ஆயி ஆயி கல்யாண காலமடி கச்சேரி மேளமடி பொற்கோல மேடையிலே பூப்போட்ட வாசமடி

குறமகள் வள்ளியொரு முருகனைக் கண்டாளாம் குலமகள் வள்ளியொரு கண்ணனைக் கண்டாளாம்

முருகனும் வள்ளியுமோ திருத்தணி சென்றாராம் முருகனும் வள்ளியுமோ திருத்தணி சென்றாராம்

கண்ணனும் வள்ளியுமோ தனித் தனி நின்றாராம்

அடி ஆயி ஆயி ஆயி ஆயி கல்யாண காலமடி கச்சேரி மேளமடி பொற்கோல மேடையிலே பூப்போட்ட வாசமடி