Adi Naagu En Rasakili |
---|
பாடகர்கள் : பி ஜெயச்சந்திரன், மகாராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
அடி நாகுஅடி நாகு என் ராசாக்கிளி புது ரோசாச் செடி பக்கம் வந்து நில்லடி நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ மயிலே குயிலே மாலைய தரவா
காட்டில் புகுந்து புலி புடிச்சேன் கரடிக் குகையில் எலிப் புடிச்சேன் ஆட்டை கடிச்ச பெரு நரியை அமுக்கி பிடிச்சு நான் கடிச்சேன்
கொம்பானையைவேலாலே நான் குத்தி கொன்னேனடி வீரன் நான்தானடி மயிலே குயிலே மாலைய தரவா
அடி நாகு என் ராசாக்கிளி புது ரோசாச் செடி பக்கம் வந்து நில்லடி நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ மயிலே குயிலே மாலைய தரவா
முருங்கை மரத்தை முட்டியிலே மோதி சாய்ச்ச முனியப்பன் நான் கோட்டை ஏறி குதிச்சிருக்கேன் பூட்டை உடைச்சு புகுந்திருக்கேன்
ஊருக்குள்ளேஆஆஆஆ ஊருக்குள்ளே என் கூட குஷ்திக்கு ஆள் ஏதடி எனக்கு ஈடேதடி மயிலே குயிலே மாலைய தரவா
அடி நாகு என் ராசாக்கிளி புது ரோசாச் செடி பக்கம் வந்து நில்லடி நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ மயிலே குயிலே மாலைய தரவா
தேடி வந்த பெண்டுகள திரும்பிக் கூட பார்த்ததில்லை அத்த மகளும் எனக்காக ஆறு வருஷம் காத்திருக்கா
உன் ஆசையால்ஆஆ உன் ஆசையால் தூங்காம ஏக்கத்தில் மெலிஞ்சேனடி உருகி போனேனடி மயிலே குயிலே மாலைய தரவா
அடி நாகு என் ராசாக்கிளி புது ரோசாச் செடி பக்கம் வந்து நில்லடி நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ
அனைவரும் : மயிலே குயிலே மாலைய தரவா மயிலே குயிலே மாலைய தரவா