Akilam Potrum Tamizharam Vaazhi |
---|
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
செங்கோல் நிலைக்கவே செல்வம் செழிக்கவே சிந்தையெல்லாம் மகிழவே மங்கையர் குலக்கொடி வந்தே பிறந்தனள் வளர்நீதி தழைத் தோங்கவே
மகுடம் காக்க வந்த மகள் வாழி குல மகள் வாழி ஒளி மங்காத வெண்குடைப் புகழ் வாழி அன்பு நிழல் வாழி ஒளி மங்காத வெண்குடைப் புகழ் வாழி அன்பு நிழல் வாழி
அகிலம் போற்றும் தமிழறம் வாழி அள்ளி வழங்கும் மணிக்கரம் வாழி அன்பு நிறைந்திடும் மனம் வாழி கதிர் ஆடி விளைந்திடும் நிலம் வாழி நீர் வளம் வாழி!
அகிலம் போற்றும் தமிழறம் வாழி அள்ளி வழங்கும் மணிக்கரம் வாழி அன்பு நிறைந்திடும் மனம் வாழி கதிர் ஆடி விளைந்திடும் நிலம் வாழி நீர் வளம் வாழி!
ஆளப் பிறந்தது பெண்ணரசு அது வாழ நினைத்துக் கொண்டாடுவோம் காலத்துக்கும் நம்ம யோகத்துக்கும் நன்றி கலந்திட கும்மி பாடிடுவோம்
ஆளப் பிறந்தது பெண்ணரசு அது வாழ நினைத்துக் கொண்டாடுவோம் காலத்துக்கும் நம்ம யோகத்துக்கும் நன்றி கலந்திட கும்மி பாடிடுவோம்
ஆஆஅ துள்ளித் திரியுது உள்ளமெல்லாம் அதைக் சொல்லித் திரியுது எண்ணமெல்லாம்
துள்ளித் திரியுது உள்ளமெல்லாம் அதைக் சொல்லித் திரியுது எண்ணமெல்லாம்
செல்லக் குமாரி தெரிசனம் காணவே தேடித் திரியுது கண்களெல்லாம் செல்லக் குமாரி தெரிசனம் காணவே தேடித் திரியுது கண்களெல்லாம்
ஆளப் பிறந்தது பெண்ணரசு அது வாழ நினைத்துக் கொண்டாடுவோம் காலத்துக்கும் நம்ம யோகத்துக்கும் நன்றி கலந்திட கும்மி பாடிடுவோம்
கத்தும் கடல் கொடுத்த முத்துச் சரந்தொடுத்த சித்திரத் தொட்டிலிலே மலர்போல-எழில் சிந்துகின்றாளிவள் விழியாலே! ஹாஆஆஆஅ
கத்தும் கடல் கொடுத்த முத்துச் சரந்தொடுத்த சித்திரத் தொட்டிலிலே மலர்போல-எழில் சிந்துகின்றாளிவள் விழியாலே! இத்தனை நாள் பொறுத்து பத்தினியீன்றெடுத்த முத்திரைத் தங்கம் இனி முறைபோலே நலம் பெற்றிட வளர்வாள் பிறைபோலே ஹாஆஆஆஅ