Anantha Thenn |
---|
ஆனந்த தேன் சிந்தும்
பூஞ்சோலையில் ஆனந்த
தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன்
அம்மா
காதல் வேகம் அந்த
சோகம் கண்டுகொள்ள
கொஞ்சம் இங்கே வந்தால்
என்னம்மா
ஆனந்த தேன் சிந்தும்
பூஞ்சோலையில் ஆயிரம்
சீர்கொண்டு வந்தவரே
காதல் வேகம்
அந்த சோகம் கண்டு
கொள்ள மஞ்சள் போட்டு
தந்தால் என்னையா
ஆனந்த தேன்
சிந்தும் பூஞ்சோலையில்
நீ நடந்து போகையிலே
பூ நடந்து போகக்கண்டேன்
ஹாஹாஹாஹா
நீ சிரிக்கும் பொன்னழகில்
பால் வடிந்து ஓட கண்டேன்
முத்தோ மணியோ
எல்லாம் கவிதை எங்கே
கற்றுக்கொண்ட வித்தை
இது
சொல்லித்தந்தது
உந்தன் பார்வை அள்ளித்தந்தது
உந்தன் ஜாடை
அன்பில் ஆடும்
உள்ளம் கண்டேன்
ஆனந்த தேன் சிந்தும்
பூஞ்சோலையில் ஆயிரம்
சீர்கொண்டு வந்தேன் அம்மா
நேரமுண்டு
காலமுண்டு மாலையிட
சொந்தமுண்டு மாலையிட்ட
பின்னால் இந்த சோலைக்கிளி
கொஞ்சும் வந்து
பொன்னே பூவே
எல்லாம் குறும்பு எங்கே
கற்றுக்கொண்ட வித்தை
இது
அச்சம்தந்தது உந்தன்
வேகம் வெட்கம் தந்தது
உந்தன் மோகம்
அன்பில் ஆடும்
உள்ளம் கண்டேன்
ஆனந்த தேன் சிந்தும்
பூஞ்சோலையில் ஆயிரம்
சீர்கொண்டு வந்தவரே
காதல் வேகம்
அந்த சோகம் கண்டு
கொள்ள மஞ்சள் போட்டு
தந்தால் என்னையா
ஆனந்த தேன் சிந்தும்
பூஞ்சோலையில் ஆனந்த
தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன்
அம்மா