Anbana Thayai

Anbana Thayai Song Lyrics In English


அன்பான தாயை விட்டு
எங்கே நீ போனாலும்
நீங்காமல் உன்னைச் சுற்றும்
எண்ணங்கள் எந்நாளும்
ஐயா உன் கால்கள் பட்ட பூமித்
தாயின் மடி
எங்கேயும் ஏதும் இல்லை
ஈடு சொல்லும் படி

காவேரி அலைகள் வந்து
கரையில் உன்னைத் தேடிடும்
காணாமல் வருத்தப் பட்டுத்
தலை குனிந்து ஓடிடும்

ஒரு பந்தம் என்பதும்
பாசம் என்பதும் வேரு விட்ட இடம்
இதை விட்டால் உன்னை வாழ வைப்பது
வேறு எந்த இடம்


தன் மண்ணை விட்டொரு
குருவிக் குடும்பம் பறந்து போகுதடி
தான் இந்நாள் வரைக்கும்
இருந்த கூட்டை மறந்து போகுதடி
இந்த நெஞ்சில் இப்படி ஆசை வந்தொரு
கோலமிட்டதடி
இதில் நன்மை கூடட்டும் தீமை ஓடட்டும்
காலம் விட்ட வழி