Anbu Manam Kanindha

Anbu Manam Kanindha Song Lyrics In English


அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா

அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா

மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ
மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ
மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ
மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ

உறவானது மனதில்
ஆஹா ஹா
மணமானது நினைவில்
ஓஹோ ஹோ

இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில்
உறவானது மனதில் மணமானது நினைவில்
இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில்
இருவர் : ல்ல்லலல்

அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
இருவர் : ஆஅஆஆஅஆஆஆ


காதலுக்கே உலகம் என்று
கனவு கண்டேனே
நான் கனவில் கண்ட காட்சி எல்லாம்
கண்ணில் கண்டேனே

காதலுக்கே உலகம் என்று
கனவு கண்டேனே
நான் கனவில் கண்ட காட்சி எல்லாம்
கண்ணில் கண்டேனே

இது காவிய கனவு
இல்லை காரிய கனவு
புது வாழ்வினிலே தோன்றும்
மங்கலக் கனவு

இது காவிய கனவு
இல்லை காரிய கனவு
இருவர் : புது வாழ்வினிலே தோன்றும்
மங்கலக் கனவுஊ

இருவர் : அன்பு மனம் துணிந்து விட்டால்
அச்சம் தோணுமா
ஆவலை வெளியிட வெகு நேரம் வேணுமா
இரு குரல் கலந்து விட்டால் இன்ப கீதமே
இன்னமுத வீணையும் அறியாத நாதமேஏ