Arul Puriyayo Jagan Nadha |
---|
இசை அமைப்பாளர் : டி ஜி லிங்கப்பா
பாடல் ஆசிரியர் : கு மா பாலாசுப்ரமணியன்
அருள் புரியாயோ ஜெகந்நாதா நீ அருள் புரியாயோ ஜெகந்நாதா அனுதினம் உன்னை பணிந்திடும் என்மேல் அருள் புரியாயோ ஜெகந்நாதா
பரம்பொருளாய் எங்கும் நிறைந்த வினோதா பாரினில் நான் படும் துயர் தெரியாதாஆஅ பாரினில் நான் படும் துயர் தெரியாதா பெருந்துயர் தீர்த்திட இன்னமும் வாதா பேரின்பத் தாண்டவம் ஆடிடும் பாதா நீ அருள் புரியாயோ ஜெகந்நாதா
ஞானசம்பந்தன் முன்னே ஓடி வந்தாயேஏ ஞானசம்பந்தன் முன்னே ஓடி வந்தாயே ஞானத்தை பாலுடன் கலந்து தந்தாயே ஊனுடல் சிதைத்த சீராளனை நீயே உரு பெறச் செய்து உளம் மகிழ்ந்தாயே நீ அருள் புரியாயோ ஜெகந்நாதா
வன்மன விலங்கெல்லாம் வன்மன விலங்கெல்லாம் வாழ்ந்திடும் தீய வனத்திலும் துருவனை காத்தவன் நீயே மண்ணில் கோரா கும்பர் மிதித்திட்ட சேயைஆஆ மண்ணில் கோரா கும்பர் மிதித்திட்ட சேயை மறுபடி உயிருடன் தவழச் செய்தாயே
அருள் புரியாயோ ஜெகந்நாதா அனுதினம் உன்னை பணிந்திடும் என்மேல் அருள் புரியாயோ ஜெகந்நாதா