Avanukkenna

Avanukkenna Song Lyrics In English


அவனுக்கென்ன
தூங்கிவிட்டான் அகப்பட்டவன்
நான் அல்லவா ஐயிரண்டு
மாதத்திலே கைகளிலே
போட்டு விட்டான்
கைகளிலே போட்டு விட்டான்

இவனுக்கென்று
எதை கொடுத்தான்
எலும்புடனே சதை
கொடுத்தான்

இதயத்தையும்
கொடுத்துவிட்டு இறக்கும்
வரை துடிக்க விட்டான்
இறக்கும் வரை துடிக்க
விட்டான்

அவனுக்கென்ன
தூங்கிவிட்டான் அகப்பட்டவன்
நான் அல்லவா ஐயிரண்டு
மாதத்திலே கைகளிலே
போட்டு விட்டான்

யானை இடம்
நன்றி வைத்தான்
காக்கை இடம் உறவு
வைத்தான்

மான்களுக்கும்
மானம் வைத்தான்
மனிதனுக்கு என்ன
வைத்தான்


அவனுக்கென்ன
தூங்கிவிட்டான் அகப்பட்டவன்
நான் அல்லவா ஐயிரண்டு
மாதத்திலே கைகளிலே
போட்டு விட்டான் கைகளிலே
போட்டு விட்டான்

வானில் உள்ள
தேவர்களை வாழவைக்க
விஷம் குடித்தான்

நாட்டில் உள்ள
விஷத்தை எல்லாம்
நான் குடிக்க விட்டு
விட்டான்

அவனுக்கென்ன
தூங்கிவிட்டான் அகப்பட்டவன்
நான் அல்லவா ஐயிரண்டு
மாதத்திலே கைகளிலே
போட்டு விட்டான் கைகளிலே
போட்டு விட்டான்