Avanukkenna |
|---|
அவனுக்கென்ன
தூங்கிவிட்டான் அகப்பட்டவன்
நான் அல்லவா ஐயிரண்டு
மாதத்திலே கைகளிலே
போட்டு விட்டான்
கைகளிலே போட்டு விட்டான்
இவனுக்கென்று
எதை கொடுத்தான்
எலும்புடனே சதை
கொடுத்தான்
இதயத்தையும்
கொடுத்துவிட்டு இறக்கும்
வரை துடிக்க விட்டான்
இறக்கும் வரை துடிக்க
விட்டான்
அவனுக்கென்ன
தூங்கிவிட்டான் அகப்பட்டவன்
நான் அல்லவா ஐயிரண்டு
மாதத்திலே கைகளிலே
போட்டு விட்டான்
யானை இடம்
நன்றி வைத்தான்
காக்கை இடம் உறவு
வைத்தான்
மான்களுக்கும்
மானம் வைத்தான்
மனிதனுக்கு என்ன
வைத்தான்
அவனுக்கென்ன
தூங்கிவிட்டான் அகப்பட்டவன்
நான் அல்லவா ஐயிரண்டு
மாதத்திலே கைகளிலே
போட்டு விட்டான் கைகளிலே
போட்டு விட்டான்
வானில் உள்ள
தேவர்களை வாழவைக்க
விஷம் குடித்தான்
நாட்டில் உள்ள
விஷத்தை எல்லாம்
நான் குடிக்க விட்டு
விட்டான்
அவனுக்கென்ன
தூங்கிவிட்டான் அகப்பட்டவன்
நான் அல்லவா ஐயிரண்டு
மாதத்திலே கைகளிலே
போட்டு விட்டான் கைகளிலே
போட்டு விட்டான்
