Boomi Neranjirukku |
---|
பாடலாசிரியர் : வாலி
பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு சாமி துணையிருக்கு செம்மறியே சோறு கண்ட இடம் சொர்க்கம் உங்களுக்கு வேறு கவலை என்ன நிம்மதியே
பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு சாமி துணையிருக்கு செம்மறியே சாமி துணையிருக்கு செம்மறியே
நாலு காலுமிருக்குன்னு சின்ன வாலுமிருக்குன்னு தாவ நினைக்காதே வேலி போட்டு இருக்கிற தோட்டம் துறவுல தாண்டி குதிக்காதே
நாலு காலுமிருக்குன்னு சின்ன வாலுமிருக்குன்னு தாவ நினைக்காதே வேலி போட்டு இருக்கிற தோட்டம் துறவுல தாண்டி குதிக்காதே
இந்த ஊரு மதிக்கிற சின்னப் பொண்ணு இவ பேரைக் கெடுக்காதே உன்னைக் கட்டிப் போட ஒரு பட்டி இருக்கிற சேதி மறக்காதேஏசேதி மறக்காதே
பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு சாமி துணையிருக்கு செம்மறியே சாமி துணையிருக்கு செம்மறியே
ஆஅஆஆஆஆ நாம சேர்த்து இருக்கிற சொத்து சுகமெல்லாம் மானம் மரியாதை அதக் காத்து கிடக்கணும் காலம் முழுவதும் சோம்பி திரியாமே
நல்ல உள்ளம் இருக்குது கள்ளம் கபடங்கள் ஏதும் தெரியாதே இந்த வெள்ளை மனசுக்கும் பிள்ளை மனசுக்கும் துன்பம் கிடையாதே துன்பம் கிடையாதே
பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு சாமி துணையிருக்கு செம்மறியே சாமி துணையிருக்கு செம்மறியே
அந்த காந்திமகானுக்கு தாகம் தணியத்தான் பாலைக் கொடுத்தீங்க குளிர் காலம் வரும்போது கம்பளி போர்வைக்கு தோலைக் கொடுத்தீங்க
உங்க பாசம் அறிஞ்சவ நேசம் அறிஞ்சவ விட்டுப் பிரிவாளோ ஒரு வண்ணம் இருப்பதை சொந்தம் இருப்பதை என்றும் மறப்பாளோஓஎன்றும் மறப்பாளோ
பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு சாமி துணையிருக்கு செம்மறியே சோறு கண்ட இடம் சொர்க்கம் உங்களுக்கு வேறு கவலை என்ன நிம்மதியே