Bramma Devanavan Varna |
---|
பிரம்மதேவனவன் வர்ண ஜாலமென்ன பாவை மேனியது கொண்ட கோலமென்ன சுந்தரியே எழில் சுந்தரியே காதலியே ஆசை காதலியே
தத்தை இவள் பக்கம் வர தழுவிட வெட்கமுற வா வா வசந்த தேனே அணைத்தேன் உன்னைத்தானேஏஏஏ
காளிதாசனவன் மேகதூதமென காதல் தாசன் இவன் ராகம் பாடி வர என்னவனே கவிதை சொன்னவனே மன்னவனே மனதில் நின்னவனே
ஆஆஅ
ஓஓ சிரிப்பில் அமுதம் சிந்தும் குமுதம் உன்னைக் கேட்கிறேன்
வேடன் கலையாய் விரித்தாய் வலையை நானும் தோற்கிறேன்
ஆஆஆடைக் கட்டும் தாமரை நீயே எனக்கு தேவதை ஆடைக் கட்டும் தாமரை நீயே எனக்கு தேவதை
தேவி என்னை புகழ்ந்தான் பூத்தூவி வாவென்றான்
பிரம்மதேவனவன் வர்ண ஜாலமென்ன பாவை மேனியது கொண்ட கோலமென்ன சுந்தரியே எழில் சுந்தரியே காதலியே ஆசை காதலியே மன்னவனே மனதில் நின்னவனே
தூண்டில் போட்டான் என்னக் கேட்டான் தேகம் சிலிர்க்குதே கன்னம் வைக்க கன்னம் தேட அன்னம் சிவக்கிறாள்
காதல் கொண்ட இளைஞனே களவாடும் திருடனே காதல் கொண்ட இளைஞனே களவாடும் திருடனே
முல்லை இவள் தடுக்க கொள்ளை எங்கு அடிக்க
காளிதாசனவன் மேகதூதமென காதல் தாசன் இவன் ராகம் பாடி வர என்னவனே கவிதை சொன்னவனே மன்னவனே மனதில் நின்னவனே
தத்தை இவள் பக்கம் வர தழுவிட வெட்கமுற வா வா எந்தன் தலைவா நான்தான் உந்தன் நிலவாஆஆஆ
பிரம்மதேவனவன் வர்ண ஜாலமென்ன பாவை மேனியது கொண்ட கோலமென்ன சுந்தரியே எழில் சுந்தரியே காதலியே ஆசை காதலியே