Chera Chola Pandiyar

Chera Chola Pandiyar Song Lyrics In English


சேர சோழ பாண்டி மன்னர்
ஆண்ட தமிழ்நாடு

ஆண்ட தமிழ்நாடு

திராவிடத்தை வேறு யாரும்
ஆள்வதென்பதேது

ஆள்வதென்பதேது

தேனைப் போன்ற தமிழ் இருக்க
வேறு பாஷை எதற்கு

வேறு பாஷை எதற்கு

இருவர் : தேசீயம் என்ற பேரில்
ஏய்ப்பதுங்கள் கணக்கு
தேசீயம் என்ற பேரில்
ஏய்ப்பதுங்கள் கணக்கு

தமிழ்நாடு

தமிழருக்கே

தமிழ்நாடு

தமிழருக்கே

தமிழ்நாடு

தமிழருக்கே

ஆந்திர தேசம் ஆந்துருலுக்கே

கிருஷ்ணதேவருடன் ராம ராய ரெமை
ஆண்ட தேசமெனும் ராமையா

ராமையா ராமையா

கொறத்த தேசமெனும் பெயரில் நீங்களதை
சேர்த்து வைத்ததென பீமையா

பீமையா பீமையா

ஆந்திரதேசமும் நாங்களும் ஒன்றாய்
வாழ்வதும் முறைதானோ

வாழ்வதும் முறைதானோ

அடிப்போம் பறிப்போம் பறிப்போம்
எமக்கு வேண்டும் தெலுங்கானா

வேண்டும் தெலுங்கானா

ஆந்திரதேசமும் ஆந்தருக்கே(3)

இருவர் : மகாராஷ்டிரம் நமதே

சிவாஜி ஆண்ட எம்மராட்டி
தேசத்தில் விரோதி வரலாமா


விரோதி வரலாமா

விடாமல் துரத்து போராட்டம் நடத்து
எழுவோம் ஒரு சேனா

எழுவோம் ஒரு சேனா

கட்டுப்பட்டு சுமந்தது போதும்

போதும்

மட்டுப் பட்டு பயந்தது போதும்

போதும்

மாறித் தட்டு வீரங்கொட்டு

வாழ்க போராட்டம்

பஞ்சாப்
நமதே

பஞ்ச நதிகள் ஒன்றாக ஓடும்
பாஞ்சால தேசமடி
பகைவரை எதிர்த்துப் பட்டாளம் சேர
அஞ்சாத தேசமடி



சண்டிகார் என்னும் புதுநகர் எங்கள்
தலைநகர் ஆகுமடி
தரமாட்டோம் அதை விடமாட்டோம்

இருவர் : என துணிந்து சபதம் செய்யடி

ஹரியும் சிவனும் என
பிரிந்து பிரிந்து நாம்
வாழ்வோம் ஹரியானா
அந்தத் தலைநகரம் எங்கள் தலைநகராம்

இருவர் : பஞ்சாப் பெறலாமா

இருவர் : வங்காளம் நமதே
கர்நாடகம் நமதே
கேரளம் நமதே
சுதந்திர காஷ்மீர் ஜிந்தாபாத்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்

இந்திய தேசத்து செல்வங்களே
இணையாதிருக்கும் உள்ளங்களே
சிந்திய ரத்தம் போதாதோ
தேசம் நாசம் ஆகாதோ
அங்கே தெலுங்கானா
அப்பப்பா இங்கே ஹரியானா
நடுவில் பல சேனா இங்கே
நடப்பது சரிதானா

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்

அடிமையாக வாழ்ந்த காலம்
மறந்து போனதா
அஞ்சி அஞ்சிக் கிடந்த காலம்
மறந்து போனதா
கொடுமை தீர்ந்து வாழ வந்தும்
ஒருமை இல்லையே
ஒரு குலத்தைப் போல வாழ்வதென்ற
பொறுமையில்லையே

மாநிலங்கள் தோறும் என்ன பிரிவினை
நாம் மறந்து விட்டோம் அண்ணல் காந்தி ஒருவனை
ஒற்றுமை காண்போம் அதில் வெற்றியும் காண்போம்
ஒற்றுமை காண்போம் அதில் வெற்றியும் காண்போம்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
நம்மிடம் ஒற்றுமை நீங்கினால்
அனைவர்க்கும் தாழ்வு
வந்தே மாதரம் என்போம்
நம் பாரதத் தாயை வணங்குவோம் என்போம்

வந்தே மாதரம் என்போம்
நம் பாரதத் தாயை வணங்குவோம் என்போம்
வந்தே மாதரம் என்போம்
நம் பாரதத் தாயை வணங்குவோம் என்போம்