Chithirai Maadha Nilavinile |
---|
சித்திரை மாத நிலவினிலே தென்றல் வீசும் இரவினிலே உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள் அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான்
சித்திரை மாத நிலவினிலே தென்றல் வீசும் இரவினிலே உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள் அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான்
பாலும் பழமும் இருந்ததங்கே படுக்கையும் விரிப்பும் கிடந்ததங்கே பாலும் பழமும் இருந்ததங்கே படுக்கையும் விரிப்பும் கிடந்ததங்கே பசியும் களைப்பும் இருக்கவில்லை பசியும் களைப்பும் இருக்கவில்லை பாவையும் அவனும் உறங்கவில்லை
சித்திரை மாத நிலவினிலே தென்றல் வீசும் இரவினிலே உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள் அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான்
கதைகள் சொன்னான் கேட்டிருந்தாள் கனிரசம் தந்தான் திரும்பிக் கொண்டாள் மலரே மணியே என்றெல்லாம் வார்த்தைகள் சொன்னான் சிரித்துக் கொண்டாள்
பேசினான் அவளோ பேசவில்லை பார்த்தான் அவளோ பார்க்கவில்லை பேசினான் அவளோ பேசவில்லை பார்த்தான் அவளோ பார்க்கவில்லை ஆசையாய் எழுந்து கைப்பிடித்தான் ஆசையாய் எழுந்து கைப்பிடித்தான் அப்புறம் நடந்தது நினைவிலில்லை
சித்திரை மாத நிலவினிலே தென்றல் வீசும் இரவினிலே உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள் அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான்