Chittukuruvi Rekkai Adichu

Chittukuruvi Rekkai Adichu Song Lyrics In English


சிட்டுக்குருவி ரெக்கை அடிச்சு தீண்ட வந்தது சுகம் வேண்டும் என்றது கட்டியணைக்க விட்டுக் கொடுத்து காதல் என்றது பனிக் காலம் வந்தது ரோசாப்பூ பூத்து ராசவ பாத்து ஆளான சேதி ஒன்ன காதில் சொன்னது

சிட்டுக்குருவி ரெக்கை அடிச்சு தீண்ட வந்தது சுகம் வேண்டும் என்றது கட்டியணைக்க விட்டுக் கொடுத்து காதல் என்றது பனிக் காலம் வந்தது

மத்தாள மேளம் ஒன்று நெஞ்சுக்குள்ளே அடிக்குதே மாமா உன் நெனப்பு வந்து மாராப்புத்தான் நழுவுதே உச்சந்தல சிலிர்க்குதே உள்ளங்கால் செவக்குதே ஒட்டி ஒட்டி ஓரசும்போது ஒலகமே மறக்குதே

தண்ணியும் கொதிக்குதே தாகம்தான் எடுக்குதே தண்ணியும் கொதிக்குதே தாகம்தான் எடுக்குதே என்னமோ பண்ணுதே காலு ரெண்டும் பின்னுதே

சிட்டுக்குருவி ரெக்கை அடிச்சு தீண்ட வந்தது சுகம் வேண்டும் என்றது கட்டியணைக்க விட்டுக் கொடுத்து காதல் என்றது பனிக் காலம் வந்தது ரோசாப்பூ பூத்து ராசவ பாத்து ஆளான சேதி ஒன்ன காதில் சொன்னது

சிட்டுக்குருவி ரெக்கை அடிச்சு தீண்ட வந்தது சுகம் வேண்டும் என்றது கட்டியணைக்க விட்டுக் கொடுத்து காதல் என்றது பனிக் காலம் வந்தது


காத்துக்கொரு வாசம் தரும் கட்டழகு பால்குடமே பூட்டாத புது ரதமே பொங்கி வந்த மதுரசமே வார்த்தைகளில் தேன் வடித்து வந்து நின்ற தனிமரமே வாடாத மணிச்சரமே வட்டமிடும் மயிலினமே

சுத்தி வரும் சுகவனமே முத்தமிடு ஒரு தரமே சுத்தி வரும் சுகவனமே முத்தமிடு ஒரு தரமே அள்ளவா சொல்லவா அந்தபுர ரகசியமே

சிட்டுக்குருவி ரெக்கை அடிச்சு தீண்ட வந்தது சுகம் வேண்டும் என்றது கட்டியணைக்க விட்டுக் கொடுத்து காதல் என்றது பனிக் காலம் வந்தது ரோசாப்பூ பூத்து காதோரம் வேர்த்து ஆளான சேதி ஒன்ன காதில் சொன்னது

சிட்டுக்குருவி ரெக்கை அடிச்சு தீண்ட வந்தது சுகம் வேண்டும் என்றது கட்டியணைக்க விட்டுக் கொடுத்து காதல் என்றது பனிக் காலம் வந்தது தீண்ட வந்தது சுகம் வேண்டுமென்றது காதல் என்றது பனிக் காலம் வந்தது