Devalogam Azhaithalum |
---|
தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும் மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா வாரணன் நாடிடும் தலைவா நானுங்கள் கனவினில் நிலவா ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ்
தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும் மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா
மல்லிகை பூவாகி மாமல்லன் சிலையாகி மல்லிகை பூவாகி மாமல்லன் சிலையாகி மரகத தேராகி மன்னனுக்கு கவியாகி
மொழியது மௌனம் கலைமகள் சரணம் மொழியது மௌனம் கலைமகள் சரணம் உனக்கும் எனக்கும் உறவில் நெருக்கம் இதுபோல் தொடரும் இதுபோல் தொடரும்
கொத்துப் பூக்கள் எட்டிப் பார்க்கும் தத்தைப் பார்த்து வெட்கி போகும் கொத்துப் பூக்கள் எட்டிப் பார்க்கும் தத்தைப் பார்த்து வெட்கி போகும் நிலையைக் கண்டால் உனக்கோர் வசந்தம் உனக்கோர் வசந்தம் உனக்கோர் வசந்தம்
தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும் மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா
சித்திர பூவோரம் சிக்கிட தினம் வாடும் சித்திர பூவோரம் சிக்கிட தினம் வாடும் சேலைதனில் இடையாடும் சிந்தை தனில் உனை நாடும்
விழி மலர் மடல்கள் வேதனையில் இதழ்கள் விழி மலர் மடல்கள் வேதனையில் இதழ்கள் தயங்கும் மயங்கும் பருவம் உருவம் மழை போல் குளிரும் மழை போல் குளிரும்
மஞ்சள் வானம் கொஞ்சும் மேகம் நெஞ்சம் காணும் தஞ்சம் தேடும் வடிவை கண்டால் உயிரே பாவம் உயிரே பாவம்உயிரே பாவம்
தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும் மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா