Ellorum Thedum Sudhanthiram |
---|
பாடலாசிரியர் : வாலி
எல்லோரும் தேடும் சுதந்திரம் இங்கேதான் வாழும் நிரந்தரம் வெல்லும் நம் காலங்களே
ராஜாங்கம் ஏதுமில்லை ராஜாக்கள் யாருமில்லை எல்லோரும் இங்கே ஒரு குலம் எல்லாமே இங்கே பொதுநலம்
எல்லோரும் தேடும் சுதந்திரம் இங்கேதான் வாழும் நிரந்தரம் வெல்லும் நம் காலங்களே
நீரில் உலவிய மீன்கள் இனி அந்த வானில் நீந்தட்டும் வானில் பழகிய பறவை இனி வந்து நீரில் வாழட்டும்
அவரவர் எண்ணம் போலே நினைத்திடும் வண்ணம் போலே அங்கேயும் இங்கேயும் எங்கேயும் வாழ்ந்தாலென்ன
எல்லோரும் தேடும் சுதந்திரம் இங்கேதான் வாழும் நிரந்தரம் வெல்லும் நம் காலங்களே
ராஜாங்கம் ஏதுமில்லை ராஜாக்கள் யாருமில்லை எல்லோரும் இங்கே ஒரு குலம் எல்லாமே இங்கே பொதுநலம்
எல்லோரும் தேடும் சுதந்திரம் இங்கேதான் வாழும் நிரந்தரம் வெல்லும் நம் காலங்களே
மான்கள் விரும்பினால் புலியை அடிக்கலாம் மலர்கள் பறந்து போய் வண்டை பிடிக்கலாம் கழுதை கத்தியும் பொழுது விடியலாம் கொண்டை சேவலும் முட்டை போடலாம்
சொட்டும் பனித்துளி முற்றும் சுவைத்தும் ஐஸ்கீரீம் ஆகட்டும் மொட்டு அரும்பிடும் செடியில் தினம் ஒரு லட்டு காய்க்கட்டும்
அதிசய உலகம் ஒன்று அமைந்தது இங்கே இன்று நமக்கினி உல்லாசம் உற்சாகம் எல்லாமே எந்நாளும் உண்டு
எல்லோரும் தேடும் சுதந்திரம் இங்கேதான் வாழும் நிரந்தரம் வெல்லும் நம் காலங்களே
ராஜாங்கம் ஏதுமில்லை ராஜாக்கள் யாருமில்லை எல்லோரும் இங்கே ஒரு குலம் எல்லாமே இங்கே பொதுநலம்
எல்லோரும் தேடும் சுதந்திரம் இங்கேதான் வாழும் நிரந்தரம் வெல்லும் நம் காலங்களே