En Annai Desame |
---|
என் அன்னை தேசமே நான் உன்னை கேட்கிறேன் ஒரு தர்மம் வாழவே நான் நீதி கேட்கிறேன் எங்கள் கரங்களில் ஏனோ விலங்குகள் நாங்கள் சுதந்திர நாட்டின் அடிமைகள் நாங்கள் சுதந்திர நாட்டின் அடிமைகள்
என் அன்னை தேசமே நான் உன்னை கேட்கிறேன் ஒரு தர்மம் வாழவே நான் நீதி கேட்கிறேன்
வெய்யிலும் இல்லாமல் மழையும் இல்லாமல் கொதிக்கும் நெஞ்சோடு உழைக்கும் வர்க்கங்களே விடிவும் இல்லாமல் முடிவும் இல்லாமல் பல பேரின் வாழ்க்கை தெருவில் நிற்கின்றதே
ஒரு கங்கை வந்தே வயல்களில் பாய்ந்தாலென்ன வயல் எங்கும் இங்கே கதிர்மணி சாய்ந்தாலென்ன வறுமை கொடுமை இதுவா உரிமை பதில் எங்கே எங்கே யார் சொல்ல
என் அன்னை தேசமே நான் உன்னை கேட்கிறேன் ஒரு தர்மம் வாழவே நான் நீதி கேட்கிறேன்
ஒரு காந்தியல்ல ஒரு நூறு காந்தி பிறந்தாலும் எங்கள் அடிமை மாறாததா கலங்கும் கண்ணோடு புலம்பும் நெஞ்சோடு துடிக்கின்ற ஏழை துயரம் தீராததா
ஒரு வீடும் இல்லை குருவியின் கூடும் இல்லை பசி ஒன்றே கண்டோம் சுதந்திரம் எங்கே கண்டோம் கொடியோ உயரம் நிலையோ துயரம் விழியெல்லாம் கண்ணீர் கோலங்கள்
என் அன்னை தேசமே நான் உன்னை கேட்கிறேன் ஒரு தர்மம் வாழவே நான் நீதி கேட்கிறேன் எங்கள் கரங்களில் ஏனோ விலங்குகள் நாங்கள் சுதந்திர நாட்டின் அடிமைகள்