En Erumai Kannukutti

En Erumai Kannukutti Song Lyrics In English


பாடகர் : மாஸ்டர் சுப்பையா

பாடல் ஆசிரியர் : எம் கருணாநிதி

ஊருக்கு உழைப்பவண்டி ஒரு குற்றம் அறியானடி உதை பட்டு சாவானடி உதை பட்டு சாவானடி

எருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி எருமைக்கன்னூக்குட்டி என்னெருமைக்கன்னுக்குட்டி

நல்லதுக்குக் காலமில்லே நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு நல்லதுக்குக் காலமில்லேஏ நல்லதுக்குக் காலமில்லே நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு நல்லதுக்குக் காலமில்லே சொல்லப்போனா வெட்கக்கேடு சொல்லப்போனா வெட்கக்கேடு

எருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி எருமைக்கன்னூக்குட்டி என்னெருமைக்கன்னுக்குட்டி


ஏய்ச்சுப் பொழைக்கிறவன் ஏழடுக்கு மாளிகையில் எகத்தாளம் போடுறானே அவன் பேச்சை மறுக்கிறவன் பிச்சை எடுக்கிறானே

எருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி எருமைக்கன்னூக்குட்டி என்னெருமைக்கன்னுக்குட்டி

நாட்டுக்குத் தலைவனென்று நம்பும்படி பேசிவிட்டு வேணும் செல்வம் வாரியே போவாரடி நாடு செழிக்க எண்ணி நாளெல்லாம் வேலை செய்யும் ஏழைக்குக் காலமில்லே எவனெவனோ வாழுகிறானே

எருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி எருமைக்கன்னூக்குட்டி என்னெருமைக்கன்னுக்குட்டி