En Iravinile Iru Nilavo

En Iravinile Iru Nilavo Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

என் இரவினிலே இரு நிலவோ என் உறவினிலே புது வரவோ ஸ்ரீ ராமனின் சிந்தைதனில் வைதேகிதான் என்னும் வேதம் மாறுமோ

ஓஓஎன் இரவினிலே இரு நிலவோ என் உறவினிலே புது வரவோ ஸ்ரீராமனின் சிந்தைதனில் வைதேகிதான் என்னும் வேதம் மாறுமோ

நீ ஈன்றெடுத்தாய் என்னை சுமந்து நல்ல நாயகனை அன்று மணந்து நான் இல்லை என்றால் என்ன ஆகும் இங்கு இன்னொரு தாய் வரக்கூடும்

பெண் பாவம் என்றும் பொல்லாது அது வேறோர் பெண்ணால் தீராது பெண் பாவம் என்றும் பொல்லாது அது வேறோர் பெண்ணால் தீராது

ஓராயிரம் எண்ணங்களை யாரோடுதான் இங்கு நானும் சொல்வதோ

ஓஓஎன் இரவினிலே இரு நிலவோ என் உறவினிலே புது வரவோஓ

ஓர் நீதிபதி என்று இருக்கும் உங்கள் தீர்ப்பிலுமா இந்த குழப்பம் நான் கேட்பதெல்லாம் ஒரு கேள்வி உங்கள் நீதிக்கும் வருமோ தோல்வி


எல்லோர்க்கும் கூறும் நியாயங்கள் அது இங்கில்லை ஏனோ சொல்லுங்கள் எல்லோர்க்கும் கூறும் நியாயங்கள் அது இங்கில்லை ஏனோ சொல்லுங்கள்

எண்ணங்களின் வண்ணப்படி எந்நாளுமே உங்கள் சட்டம் மாறுமோ

ஓஓஎன் இரவினிலே இரு நிலவோ என் உறவினிலே புது வரவோஓ

நீ உள்ளத்தினால் சிறு குழந்தை உன் வார்த்தைகளே ஒரு மழலை நான் தாங்கிக் கொள்வேன் உன்னை மடியில் என் தாரத்தையே பிள்ளை வடிவில்

ஏழேழு ஜென்மம் என்றாலும் என் ஜீவன் நீயே எந்நாளும் ஏழேழு ஜென்மம் என்றாலும் என் ஜீவன் நீயே எந்நாளும்

நீர் மாறலாம் நிலம் மாறலாம் யார் மாறினும் இந்த பந்தம் மாறுமோ