En Peyare Enakku Marandhu |
|---|
அனாமிகா அனாமிகா அனாமிகா
என் பெயரே எனக்கு மறந்து போன
வனாந்தரத்தில் என்னை பெயர் சொல்லி
அழைத்தது யார் நீயா நீயா
என்னை ஒரு மின்னல் கீற்று
என்றல்லவா நினைத்திருந்தேன்
நீ எப்படி அதில் நிரந்தரப் பாய் முடைந்தாய்
லாலாலலலலலலலால்ல்லா
எனது யாத்ரையில் எல்லா மனிதர்களும்
எல்லை கற்களாய் இருக்க
நீ மட்டும் எனக்கு பாதை ஆகினாய் எப்படி
பருவ காலங்களால் புஷ்ட்டிக்காத
என் தோட்டங்கள்
உன் பார்வைகளால் புஷ்ட்டித்ததே
தீ விழுந்தாலும் உருகாத என் நெஞ்சு
ஒரு பூ விழுந்த போது உருகியதே
லாலாலலலலலலலால்ல்லாஆஆஆஆ
இந்த காதல் மேகம்தான்
மனமென்னும் எரிமலையை
மழை சிந்தி மழை சிந்தி அதில்
உல்லாச வனங்களை உற்பத்தி செய்யும்
இதய ரோஜாச் செடியில்
இந்த ஒற்றைப் பூ பூத்துவிட்டால்
அத்தனை முட்களும் உதிர்ந்து போகின்றன
வாலிபம் ஏந்தி பார்க்கும் திருவோடும் இதுதான்
வாலிபம் சூடி பார்க்கும் கிரீடமும் இதுதான்
லாலாலலல லலலலால்ல்லாலாலாலாலா
முதலில் சப்தங்களுக்கு
அர்த்தம் சரியாய் விலகவில்லை
இப்போதோ மௌனத்திற்கும் கூட
உரை எழுத முடிகிறது
என் கண்கள் உன்னிடம் காதல் பிச்சை
கேட்கும் அமுதசுரபிகள்
அமுதசுரபிகள் பட்டினி கிடக்கலாமா
உன் பார்வையை பிச்சையிடுபிச்சையிடு
லாலாலலலலலலலால்ல்லா
