En Pillai Mugam

En Pillai Mugam Song Lyrics In English


என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு உன் மழலை மொழி புரிகிறது எனக்கு என் கவலை மொழி புரிகிறதா உனக்கு

முன்பு நான் தவமிருந்தேன் முன்னூறு நாள் சுமந்தேன் பின்பு உன்னை நானடைந்தேன் நானடைந்தேன் முன்பு நான் தவமிருந்தேன் முன்னூறு நாள் சுமந்தேன் பின்பு உன்னை நானடைந்தேன் நானடைந்தேன்

அன்பு மகன் ஓரிடத்தில் அன்னை மட்டும் வேறிடத்தில் கோடித் துன்பம் நானடைந்தேன் ஏனடைந்தேன் ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ

என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு உன் மழலை மொழி புரிகிறது எனக்கு என் கவலை மொழி புரிகிறதா உனக்கு ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ


தங்கத்தால் கோயில் கட்டி வைரத்தால் வாசல் வைத்து தெய்வத்தை நானடைந்தேன் நானடைந்தேன் கோயில் மட்டும் ஓரிடத்தில் தெய்வம் மட்டும் வேறிடத்தில் கோடித் துன்பம் நானடைந்தேன் ஏனடைந்தேன் ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ

என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு உன் மழலை மொழி புரிகிறது எனக்கு என் கவலை மொழி புரிகிறதா உனக்கு ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ