En Thalaivan Varukiran |
---|
பாடகி : எஸ் ஜானகி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
என் தலைவன் வருகிறான் நேரிலே நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே என் தலைவன் வருகிறான் நேரிலே நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே
பொன் பதித்த தேகம் அதில் பொங்கி வரும் மோகம் பொன் பதித்த தேகம் அதில் பொங்கி வரும் மோகம்
கண்ணிரெண்டும் பாடுவது ரஞ்சனி ராகம் சிவரஞ்சனி ராகம் கார்த்திகையில் பிறந்து வரும் ஆனந்த ராகம்
என் தலைவன் வருகிறான் நேரிலே நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே
குத்து விளக்கேற்றி நல்ல கோலங்களும் தீட்டி மத்தள மேளங்களில் மங்கலம் கொட்டி குத்து விளக்கேற்றி நல்ல கோலங்களும் தீட்டி மத்தள மேளங்களில் மங்கலம் கொட்டி
எனை மணவறையில் நிற்க வைத்தார் ஆரத்தி சுற்றி பட்டுவண்ண சேலை பளபளக்கும் மாலை பட்டுவண்ண சேலை பளபளக்கும் மாலை கட்டிக்கொண்டு நானிருப்பேன் திருமண வேளை எனை கைப்பிடித்து சுகம் தருவார் கண்மணி காலை எனை கைப்பிடித்து சுகம் தருவார் கண்மணி காலை
என் தலைவன் வருகிறான் நேரிலே நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே
ஆடி மாதக் காற்று அவன் ஆசையுள்ள ஊற்று கோடி கோடி தந்த போதும் வேறில்லை மாற்று ஆடி மாதக் காற்று அவன் ஆசையுள்ள ஊற்று கோடி கோடி தந்த போதும் வேறில்லை மாற்று
நான் கோமகனின் காலடியில் விளைந்திடும் நாற்று கண்ணழகு கவிதை அவன் காலடியோ தாளம் கண்ணழகு கவிதை அவன் காலடியோ தாளம்
வெண்ணிலவு சாறெடுத்து ஏற்றி வைத்த தீபம் அந்த வேந்தனை நான் மணப்பதுதான் அந்த வேந்தனை நான் மணப்பதுதான் தெய்வம் தந்த லாபம்
என் தலைவன் வருகிறான் நேரிலே நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே