Enai Nee Paadathae |
---|
பாடகி : எஸ் ஜானகி
பாடலாசிரியர் : வாலி
ஆஆஅஆஅஆஅஆ ஆஆஆஆஆஆ
எனை நீ பாடாதே தலைவா நான் உன் பாட்டல்ல எனை நீ தேடாதே நான் உன் பாட்டின் பொருளல்ல நான் பாடும் பாமாலை உனைச் சேரலாம் நான் சூடும் பூமாலை இடம் மாறலாம்
எனை நீ பாடாதே தலைவா நான் உன் பாட்டல்ல தலைவா நான் உன் பாட்டல்ல
நானொரு காவேரி கடல் சேர வந்தேன் நாயகன் நீ என்று நிழல் தேடி நின்றேன் ஆயினும் விதி இங்கு அணை போட கண்டேன் ஆண்டவன் திருவுள்ளம் திசை மாறிச் சென்றேன்
யார் வசம் யார் என்று யார் சொல்வதோ ஊர்வலம் எதுவென்று தேர் சொல்வதோ ஊமை நான் தான் சோகமே ராகமாய் கீர்த்தனம் ஆக
எனை நீ பாடாதே தலைவா நான் உன் பாட்டல்ல எனை நீ தேடாதே நான் உன் பாட்டின் பொருளல்ல
கல்யாண ஆசை கைகூடும் என்று பூமாலை ஒன்று தொடுத்தேன் பாதை மாறாத பயணம்தான் என்று காதல் சங்கீதம் படித்தேன்
கல்யாண ஆசை கைகூடும் என்று பூமாலை ஒன்று தொடுத்தேன் பாதை மாறாத பயணம்தான் என்று காதல் சங்கீதம் படித்தேன்
நான் கொண்ட நினைவு தேய்கின்ற நிலவு நீ தந்த உறவு நான் கண்ட கனவு அன்பில் இணைந்தது ஆடி முடிந்தது பாடல் பிறந்தது பாடி முடிந்தது அம்மம்மா
ஆஆஅஆஅஆஅஆ ஆஆஆஆஆஆஆஅஆ எனை நீ பாடாதே