Enakkoru Manipura Jodi |
---|
பாடலாசிரியர் : வாலி
எனக்கொரு மணிப்புறா ஜோடியென்று இருந்தது அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது மனமெல்லாம் அந்த நினைவுதான் விழியெல்லாம் அந்த கனவுதான்
அழகு பார்த்து அழகு பார்த்து எழுதி வைத்த பொன்மானை அணைத்தவன் நான்தானே என்னோடு இன்று அடுத்தவன் கொண்டானே தன்னோடு
விழிகளில் நீரோட உணர்ச்சிகள் போராட விழிகளில் நீரோட உணர்ச்சிகள் போராட எனக்கில்லை ஒரு கூடு இருந்தென்ன உயிரோடு
எனக்கொரு மணிப்புறா ஜோடியென்று இருந்தது அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது மனமெல்லாம் அந்த நினைவுதான் விழியெல்லாம் அந்த கனவுதான்
அவளுக்காக அவளுக்காக அழுவதென்ன நெஞ்சே நீ தலைவிதி கண்ணீரில் அழியுமா அன்று வகுத்ததை நீ மாற்ற முடியுமா
உலர்ந்தது பூந்தோட்டம் அதற்கில்லை நீரோட்டம் உலர்ந்தது பூந்தோட்டம் அதற்கில்லை நீரோட்டம் உதிர்ந்தது அரும்பாது கடந்தது திரும்பாது
எனக்கொரு மணிப்புறா ஜோடியென்று இருந்தது அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது மனமெல்லாம் அந்த நினைவுதான் விழியெல்லாம் அந்த கனவுதான்
ஊரழைத்து உறவழைத்து பேசி வைத்த கல்யாணம் மஞ்சள் முடி போடாமல் முடிந்ததே ரெண்டு மனங்களும் கூடாமல் பிரிந்ததே
கரையினில் மீனாக தவிப்பவன் நானாக கரையினில் மீனாக தவிப்பவன் நானாக தலைவனின் நிழலாக குலமகள் நீ வாழ்க
எனக்கொரு மணிப்புறா ஜோடியென்று இருந்தது அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது மனமெல்லாம் அந்த நினைவுதான் விழியெல்லாம் அந்த கனவுதான்