Endha Neramum |
---|
எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ குறவள்ளீசிறு கள்ளி எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ
இந்த நேரத்திலே மலைவாரத்திலே நதியோரத்திலே உனைக் கூடி நின்றன் வீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்திலே மனம் மிக்க மகிழ்ச்சி கொண்டாடி
குழல் பாரத்திலே இதழீரத்திலே முலையோரத்திலே அன்பு சூடி நெஞ்சம் ஆரத் தழுவி அமர நிலை பெற்றதன் பயனை இன்று காண்பேன்
எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ குறவள்ளீசிறு கள்ளி எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ
வட்டங்கள் இட்டும் குளமகலாத மணங்ப்பெருந் தெப்பத்தைப் போல நினை விட்டு விட்டுப் பல லீலைகள் செய்து நின் மேனிதனை விடலின்றி
அடி எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை இரவியைப் போன்ற முகத்தாய் முத்தம் இட்டுப் பல முத்தமிட்டுப் பலமுத்தம் இட்டுனைச் சேர்ந்திட வந்தேன்
எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ குறவள்ளீசிறு கள்ளி எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ