Engirundho Vandhan |
---|
ஆஆஆஆஅஆஆஆ ஸாநிநித ஸஸநித ஸநிநிததபபம பபமகஸநி நிஸஆஆஆஆஅஆஆ
எங்கிருந்தோ வந்தான் எங்கிருந்தோ வந்தான் யாதவ குலத்து மாதவன் மதுசூதன் யாதவ குலத்து மாதவன் மதுசூதன்
எங்கிருந்தோ வந்தான் எங்கிருந்தோ வந்தான்
தெங்கிருக்கும் நீர் போல் நீரிருக்கும் கார் போல் ஆஆஆஆஅஆஆஆ தெங்கிருக்கும் நீர்போல் நீரிருக்கும் கார் போல் காரிருக்கும் வான் போல் வான் இருக்கும் நீர் போல் காரிருக்கும் வான் போல் வான் இருக்கும் நீர் போல்
எங்கிருந்தோ வந்தான்
புன்னை வனம் பூச்சொரிய புள்ளினங்கள் பாட்டெடுக்க பொன்னிலவு குளிர் வார்க்க முன்னிரவு பனி தூவ கங்கை நதி போலே ஓர் மங்கை நதி அலை பாய கண்ணன் வரும் திசைப்பார்க்க கண்ணிரண்டில் அனல் பாய
வெப்பமது தாளாது தெப்பம் என உடல் வேர்க்க பேதை ராதைபேச்சு மூச்சு தளர்ந்திட மேலும் மேலும் மோக ராகம் வளர்ந்திட
கனவுகள் கோடி விழிகளில் ஓடி உயிர் மலர் வாடி தனித்து இருக்கும் தவித்து கிடக்கும் வண்ணமயில் நெஞ்சுருகும் வேளையிலே
எங்கிருந்தோ வந்தான்
குன்றெடுத்து கோகுலத்தில் கன்றுகளை காத்தவனை கையெடுத்து தொழுவேனே கைக்கொடுக்க துதிப்பேனே முன்னமுள்ள மறை நான்கும் மெச்சுகின்ற குருவாயூர் குருவாயூர்ஆஆஆஆஆ முன்னமுள்ள மறை நான்கும் மெச்சுகின்ற குருவாயூர் அச்சுதனை மறவேனே அர்ச்சனைகள் புரிவேனே திக்கு திசை அறியார்க்கு தக்க துணை அவன் தானே
தேரில் ஏறி கீதை சொன்ன திருமகன் தாய்கள் இரண்டு பேர்க்கு வாய்த்த ஒருமகன் நலங்களை சேர்க்க குணங்களை காக்க வினைகளை தீர்க்க நினைத்து நினைத்து நெகிழ்ந்து நெகிழ்ந்து சந்ததமும் வந்தருள வேண்டிடவே
எங்கிருந்தோ வந்தான்ஸகமபநி எங்கிருந்தோ வந்தான்
எங்கிருந்தோ வந்தான் எங்கிருந்தோ வந்தான் எங்கிருந்தோ வந்தான்
எங்கிருந்தோ வந்தான் எங்கிருந்தோ வந்தான் யாதவ குலத்து மாதவன் மதுசூதன் எங்கிருந்தோ வந்தான் எங்கிருந்தோ வந்தான்