Enna Thavam Seithen |
---|
பாடலாசிரியர் : வாலி
என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல ஆஹ ஆஹா ஆஹாஆஆஆ
என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல
எனக்காக நீதான் என்று எதிர்ப்பார்க்கவில்லை எனக்காக நீதான் என்று எதிர்ப்பார்க்கவில்லை ஆனந்த வெள்ளம் அணைக்கொள்ளவில்லை ஆனந்த வெள்ளம் அணைக்கொள்ளவில்லை
மணமேடை மந்திரம் மாங்கல்ய தாரணம் நான் கொள்ள இன்று நீதானே காரணம் ஆஹாஆஹாஆஆஆஹா ஆஹா
என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல
மதம் மாறி நின்றால் என்ன மனம் மாறவில்லை மதம் மாறி நின்றால் என்ன மனம் மாறவில்லை மனம் கொண்ட காதல் தடுமாறவில்லை மனம் கொண்ட காதல் தடுமாறவில்லை
உயிர் கொண்ட ஓவியம் எதிர் வந்து நின்றதோ ஒரு கோடி இன்பம் நீ தந்ததல்லவோ லாலாலால்லாலாலாலால்லா லாலாலாலாலா
கண்ணா உன் நெஞ்சில் இந்த கனி ஆட வேண்டும் காலங்கள் யாவும் இனிதாக வேண்டும் பூவோடு குங்குமம் நான் சூட வேண்டும் கல்யாண கோலம் நான் காண வேண்டும்
என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல என்ன தவம் செய்தேன்