Ennathan Indha Mounam |
---|
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
என்னதான் இந்த மௌனம் சந்நிதானத்தில் இந்த நேரத்தில் உனக்கென்ன தியானத்தில் கவனம்
என்னதான் இந்த மௌனம் சந்நிதானத்தில் இந்த நேரத்தில் உனக்கென்ன தியானத்தில் கவனம்
வலம் வந்து தம்பியின் வாழ்வுக்கு வேண்டினேன் வரம் தரவே மனம் இல்லையோ தினம் வந்து தினம் வந்து தீபத்தை ஏற்றினேன் தெய்வத்தின் கருணை இல்லையோ
எந்தன் உள்ளத்தை எந்தன் எண்ணத்தை எந்தன் உள்ளத்தை எந்தன் எண்ணத்தை
இங்கு யார் முன்னே நான் சொல்லுவேன் இங்கு யார் முன்னே நான் சொல்லுவேன்
என்னதான் இந்த மௌனம் சந்நிதானத்தில் இந்த நேரத்தில் உனக்கென்ன தியானத்தில் கவனம்
மலர் கொண்டு மணம் கொண்டு திருமணநாள் கண்டு வாழ்ந்திடவே மனம் துடிக்குதே துயர் கொண்டு தினம் இங்கு துடிக்கின்ற பொன்வண்டு வாழ்க்கையிலே அங்கு தவிக்கிதே
சுகம் தோன்றுமோ துன்பம் நீங்குமோ சுகம் தோன்றுமோ துன்பம் நீங்குமோ
புது வசந்தங்கள் உருவாகுமோ புது வசந்தங்கள் உருவாகுமோ
என்னதான் இந்த பார்வை சந்நிதானத்தில் இந்த நேரத்தில் உனக்கென்ன காரியம் தேவை
மனம் என்னும் படகொன்று அலை வந்து மோதவே பாசத்திலே அது ஆடுதே கலைவண்ண சிலை ஒன்று கண்களில் நீர் கொண்டு காதலிலே தினம் வாடுதே
இது நியாயமோ செய்த பாவமோ இது நியாயமோ செய்த பாவமோ எந்தன் எண்ணங்கள் நிறைவேறுமோ எந்தன் எண்ணங்கள் நிறைவேறுமோ
என்னதான் இந்த மௌனம் சந்நிதானத்தில் இந்த நேரத்தில் உனக்கென்ன தியானத்தில்