Enthan Kural Kettu

Enthan Kural Kettu Song Lyrics In English


எந்தன் குரல் கேட்டு
உனை தூக்கம் தழுவாதா

எந்தன் குரல் கேட்டு
உனை தூக்கம் தழுவாதா
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே நண்பனே நண்பனே

இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்லுவேன்
நண்பனே நண்பனே நண்பனே

எந்தன் குரல் கேட்டு
உனை தூக்கம் தழுவாத
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாதா

இரவென்றும் பகல் என்றும்
உனக்கில்லையே
இளங்காலை பொன்மாலை உனக்கில்லையே
மதுவென்னும் தவறுக்கு ஆளாகினாய்
அதற்காக நியாயங்கள் நீ தேடினாய்

ஆயிரம் பூக்களில்
ஆனந்தம் காண்கிறாய்
நிறங்களே வேற்றுமை
நினைத்திடு நண்பனே
மது கிண்ணம்தனை எடுத்து
பெண்ணை விலை கொடுத்து விழி மூடுமா

எந்தன் குரல் கேட்டு
உனை தூக்கம் தழுவாதா
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாதா


வரவின்றி செலவானால்
தவறில்லையே
வாழ் நாட்கள் செலவானால் வரவில்லையே
நேற்றோடும் இன்றோடும் நீ இல்லையே
நாளை உன் கையோடு உனக்கில்லையே

யாரிடம் தவறில்லை
யாரிடம் குறை இல்லை
தூக்கமே நிம்மதி
தூங்கிடு நண்பனே
நீ கடந்த காலங்களை
கலைந்து எறிந்து விடு விழி மூடுமே

எந்தன் குரல் கேட்டு
உனை தூக்கம் தழுவாதா
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே நண்பனே நண்பனே

இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்லுவேன்
நண்பனே நண்பனே நண்பனே

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்