Ethirkaalam Ini

Ethirkaalam Ini Song Lyrics In English


ஆஅஆஅஆஆஆ ஆஅஆஅஆஆஆ

எதிர்காலம் இனி நம் பேர் எழுதும் நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும் இது ஏழையின் உரிமைக் குரல் இது எங்களின் கடமை குரல் தொழுவோம் உழுவோம் வீறு போல் எழுவோம்

எதிர்காலம் இனி நம் பேர் எழுதும் நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும்

ஆஅஆஅஆஆஆ ஆஅஆஅஆஆஆ ஆஅஆஅஆஆஆ ஆஅஆஅஆஆஆ

அப்பனும் பிள்ளையும் கொத்தடிமை என்னும் கட்டளை மாறியது நித்தமும் சிந்திய வேர்வை எல்லாம் கடல் எல்லையாய் மீறியது

வறியவரின் விழிகளெல்லாம் எரிமலையாகியது பொறுமையெல்லாம் மாறியது புது வழி தோன்றியது இருள் விலகும் பொழுது இது இன்னலும் துன்பமும் நீங்கியது

எதிர்காலம் இனி நம் பேர் எழுதும் நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும்

இது ஏழையின் உரிமைக் குரல் இது எங்களின் கடமை குரல் தொழுவோம் உழுவோம் வீறு போல் எழுவோம்


எதிர்காலம் இனி நம் பேர் எழுதும் நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும்

ஆஅஆஅஆ ஆஅஆஅஆ

ஏழைகள் இருக்கிற வீட்டினில் இதுவரை இன்பங்கள் வந்ததில்லை கண்கள் வழிகிற காவிரிகள் ஒரு காலமும் நின்றதில்லை

இதுவரையில் பொறுத்திருந்தோம் இருட்டில் படுத்திருந்தோம் விடிவு வரும் என நினைத்து விழிகளை திறந்திருந்தோம் புதிய ஒளி பிறந்ததடா புது வழி அதனில் திறந்ததடா

எதிர்காலம் இனி நம் பேர் எழுதும் எதிர்காலம் இனி நம் பேர் எழுதும் நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும் நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும்

இது ஏழையின் உரிமைக் குரல் இது எங்களின் கடமை குரல் தொழுவோம் உழுவோம் வீறு போல் எழுவோம்

ஆஅஆஅஆஆஆ ஆஅஆஅஆஆஆ