Ethirparthen Ilangiliya |
---|
எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே வாராளோ என் மாது பூங்காற்றே போ தூது
எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
தொடத்தொட தள்ளி தள்ளிப் போனா நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீனா தொடத்தொட தள்ளி தள்ளிப் போனா நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீனா
தாகத்தோட நானிருக்க தண்ணீர் குடமாய் நீயிருக்க தேடி வந்தா ஒதுங்குவதேன் தென்றல போலே ஓடுவதேன் தேன்தான் சிந்தும் செந்தாமரையே இது ஏன்தான் சொல்லு என் பூங்கொடியே
எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை கேட்டால் விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை கேட்டால் விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை
ஊருக்குள்ளே தீப்பிடிச்சா ஓடையும் உண்டு தீயணைக்க உள்ளத்திலே நெருப்பெரிஞ்சா உடனே வரணும் நீயணைக்க ஏன்தான் இல்ல என் ஞாபகமே அடி வா வா கொஞ்ச என் தேன் குடமே
எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே வாராளோ என் மாது பூங்காற்றே போ தூது
எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே