Geetha Orunaal Pazhagum |
|---|
கீதாகீதாகீதா
கீதா ஒருநாள் பழகும் உறவல்ல
காதல் நீரில் தோன்றும் நிழலல்ல
கீதா ஒருநாள் பழகும் உறவல்ல
காதல் நீரில் தோன்றும் நிழலல்ல
ஊடலில் கொஞ்சம்
லல்ல லல்ல லலலா
போய்வர என்னும்
லல்ல லல்ல லலலா
பூவையர் உள்ளம்
ஆஆஆஆ
புதுமலர் வண்ணம்
ஓஓஓஓ
உனக்காக பிறந்தேனே
உயிரோடு கலந்தேனே வா
கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல
காதல் நீரில் தோன்றும் நிழலல்ல
நான் தொடும் வேளையில் மெல்ல
துள்ள
நால்வகை குணங்களும் செல்ல
அள்ள
சேலையிட்ட சித்திரத்தின்
மேனி தொட்டு கொஞ்சவோ
மோதுகின்ற காதல் வெள்ளம்
போதும் என்று சொல்லவோ
இன்னும் என்ன சின்னஞ்சிறு
பிள்ளை என்ற எண்ணமோ
கன்னம் என்ன மன்னன் வந்து
தேன் அருந்தும் கிண்ணமோ
நானாக தரும் நேரம் தானாக உருவாகும் வா
கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல
காதல் நீரில் தோன்றும் நிழலல்ல
கால் முதல் தலை வரை தழுவ
நழுவ
கொடியிடை பொடி நடை பழக
உருக
ஒட்டிக்கொண்டு ஒன்றிரண்டு
கட்டுக்கதை சொல்லவோ
இன்று அல்ல நாளை என்று
எட்டி எட்டி செல்லவோ
தென்னஞ்சோலை தன்னை விட்டு
தென்றல் என்றும் ஓடுமோ
கன்னி பெண்மை தானே வந்து
பின்னிக் கொண்டு ஆடுமோ
மணமாலை தரவேண்டும் மறுநாளில்
பெறவேண்டும் வா
கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல
காதல் நீரில் தோன்றும் நிழலல்ல