Hare Gopala Srihari Madhava |
---|
ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா அன்று பாஞ்சாலி மானம் காத்தவன் நீயே பாரதம் பொய் சொல்லுமா கண்ணா
ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா அன்று பாஞ்சாலி மானம் காத்தவன் நீயே பாரதம் பொய் சொல்லுமா கண்ணா
ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா
கோபியர் சேலையைத் திருடிய கள்வன் கோகுலக் கண்ணன் அல்லவாஆ கோமள மேனியைப் பாவனை செய்தவன் யாதவக் கண்ணன் அல்லவாஆ
கௌரவர் சபையிலே ஆடையைத் தந்தவன் பகவான் கண்ணன் அல்லவா கடவுள் மனிதனா மனிதன் கடவுளா கண்ணா உனக்குச் சொல்லவா கண்ணா உனக்குச் சொல்லவா
ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா
என்ன உன் ஆசையோ என்ன உன் தேவையோ என்னிடம் நீ கேட்கலாம் என்னையும் ராதையை எண்ணும் மாதவா என்னையும் ராதையை எண்ணும் மாதவா எதனையும் நீ பார்க்கலாம்
பொன் எழில் மேனியைப் புகழ்பெறும் தேவியைப் பூமியில் நீ காக்கலாம் போதையில் சொல்வதும் கீதையில் சொன்னதும் ஒன்றென நீ காட்டலாம் ஒன்றென நீ காட்டலாம்
ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா
இரவில் வீணை சுருதியை மீட்டு இளமையின் இசை கேட்கலாம் உறவின் சுகத்தில் உலகத்தைக் காட்டு உற்சவப் பொருள் காணலாம்
பருவ நிலாவை உன் மேகத்தில் மூடு பாரதக் கதை பாடலாம் பாரதக் கதை பாடலாம் பாவம் ஒருத்தியின் வாழ்வின் காக்க பாவம் தவம் ஆகலாம்ஆ பாவம் தவம் ஆகலாம்