Idho Endhan Deivam

Idho Endhan Deivam Song Lyrics In English


இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

பாசமுள்ள பார்வையிலே
கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்

பாசமுள்ள பார்வையிலே
கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

அவன் பூ விரியும் சோலையிலே
மணப்பான்
இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
அவன் பூ விரியும் சோலையிலே
மணப்பான்
இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்

குளிர் மேகமென தாகத்தையே
தணிப்பான்
தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே
தணிப்பான்
தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

பாசமுள்ள பார்வையிலே
கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே


பல நூல் படித்து
நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து
நீ வழங்கும் செல்வம்

பிறர் உயர்வினிலே
உனக்கு இருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே
இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே
இருப்பதுதான் தெய்வம்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

தன் வியர்வையிலும் உழைப்பினிலும்
வாழ்வை கண்டு தொழில் புரிந்து
உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிபொலியாய் கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்

பாசமுள்ள பார்வையிலே
கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே
ஹாஆஅஹாஆஅ
ஹோ ஓஒ ஹோ ஓஓ

Tags