Idhu Varaiyil Mudhal Iravu |
---|
இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான் இனி மலரும் பல இரவு உறவுகளில்தான் ஆசைக்கு அர்த்தம் சொல்லும் நாள் வந்தது நான் கேட்ட மாலை இன்று தோள் வந்தது கல்யாணப் பாடல் சொல்ல வா
இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான் இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்
ஆகாய மேகமே நீர் விட்டது ஆனந்தம் பூமியில் வேர் விட்டது பூவோடு காயும் கொடி கொண்டது கொடியோடு யாவும் மடி கண்டது
மடியில் வரவும் ஒரு மின்னல் பாய்ந்தது தனனா தனனா தன்ன தன்னா என்னென்று நீயும் சொல்லக் கூடாதோ
இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான் இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்
ஆரம்பமானது ஆலிங்கனம் அது இந்தக் காதலில் ஆலாபனம் ஏகாந்த நேரம் ராஜாங்கமோ ஏன் இந்த நாணம் பூர்வாங்கமோ
உதடும் உதடும் ஒரு சந்தம் பாடுது லலலா லலலா லல லலா உற்சாக கங்கை ஒன்று பாயாதோ
இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான் இனி மலரும் பல இரவு உறவுகளில்தான் ஆசைக்கு அர்த்தம் சொல்லும் நாள் வந்தது நான் கேட்ட மாலை இன்று தோள் வந்தது கல்யாணப் பாடல் சொல்ல வா