Ilaveyil Ilaigalil Olira |
---|
கண்ணா நீ நினைபதென்ன ராதையின் ராகங்களா உந்தன் மனம் மகிழ்ந்திட உயிர் பூக்களால் பூஜை செய்தேன்
ச க ரி க ம நி நி ச
இளவெயில் இலைகளில் ஒளிர இந்த யமுனையும் யுவதியாய் மிளிர இதம் தரும் இளமையின் காற்றாய் தழுவிடவே வா என் இனியவளே வா
சின்ன சின்ன மழை துளி சிதற இந்த மலர்களம் வனமென வளர மரங்கொத்தி பறவையை போலே மனம் துளைத்தாய் வா என் மன்மதனே வா
என் மனவானில் நீ பொன் ஊஞ்சல் ஆடி மின்னும் நிலவே என் சுவாசம் நீயே மன்னவன் தோளில் மலர்கொடியானேன் உன்னோடு என்னை உள்வாங்கி கொள்வாய் நீ
இளவெயில் இலைகளில் ஒளிர இந்த யமுனையும் யுவதியாய் மிளிர இதம் தரும் இளமையின் காற்றாய் தழுவிடவே வா என் இனியவளே வா
வண்ண ஜாலம் நிகழ்ந்தும் வானின் மின்னல் போல வந்தாய் கண்ணில் கோலம் வரைந்தே உன்னை என்னில் ஏற்க நின்றேன்
உன்னை கண்ட நொடியில் நானோ என்னை இழந்து போனேன் பெண்ணே உன்னை வடிக்க பிரம்மன் செய்ததென்ன தவமோ
உனக்குள்ளே உருகுகிறேனே உயிர் நீயே உன்னில் கலந்தேனே வரனே உன் வசமானேன் புது வரவுக்கு வழியை விடு சகியே நான் உனதானேன் இனி சந்தோஷ உல்லாச சரசமிடு
சின்ன சின்ன மழை துளி சிதற இந்த மலர்களம் வனமென வளர மரங்கொத்தி பறவையை போலே மனம் துளைத்தாய் வா என் மன்மதனே வா
தேனை உண்ணும் வண்டாய் மலர் உன்னை தேடி வந்து நின்றேன் வீணை மீட்டும் விரல் போல் விழிகளில் ஜாடை காட்டி வென்றாய்
வானவில்லை போலே வாழ்வில் வண்ணம் சேர்க்க வந்தாய் ஞான கள்வனாக என்னுள் கன்னம் இட்டு நுழைந்தாய்
மணம் வீசும் மலர் அல்லவோ நீ ஓ மனம் பேசும் மதனல்லவோ நீ
ஸ்ருதியோடு ஜதி போல இனி இருவரும் இசைந்திருப்போம் கடல் சேரும் நதி போல தனி உல்லாச தடங்களை வகுத்திடுவோம்
இளவெயில் இலைகளில் ஒளிர இந்த யமுனையும் யுவதியாய் மிளிர இதம் தரும் இளமையின் காற்றாய் தழுவிடவே வா என் இனியவளே வா