Inbamenge Inbamenge Endru

Inbamenge Inbamenge Endru Song Lyrics In English


பாடகர்  : சீர்காழி கோவிந்தராஜன்

பாடல் ஆசிரியர்  : ஏ மருதகாசி

தூங்கையிலே வாங்குகிற மூச்சு இது சுழிமாறிப் போனாலும் போச்சு உலுத்த மூங்கில் உடல் மேல் மினுக்குப் பூச்சு என்ற மொழி என்றும் உண்மையான பேச்சுஆஆஅ

இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு

இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இதை எண்ணிடாது சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை

இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இதை எண்ணிடாது சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை

இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை இல்லையென்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை

இன்பமெங்கே இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு

கனிரசமாம் மதுவருந்தி களிப்பதல்ல இன்பம் கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்


கனிரசமாம் மதுவருந்தி களிப்பதல்ல இன்பம் கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்

இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் – அவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்

இன்பமெங்கே இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம் வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம் வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்

மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம் உன் மார் மீது உதைப்பதிலே கிடைப்பதுதான் இன்பம்

இன்பமெங்கே இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு