Indha Mandrathil Odi Varum |
---|
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
வண்ண மலர்களின் அரும்பாவாள் உன் மனதுக்குள் கரும்பாவாள் வண்ண மலர்களின் அரும்பாவாள் உன் மனதுக்குள் கரும்பாவாள் இன்று அலைகடல் துரும்பானாள் என்று ஒரு மொழி கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் அவள் விடிந்தபின் துயில்கின்றாள் என்னும் வேதனை கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன் என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்
தன் கண்ணனை தேடுகிறாள் மன காதலை கூறுகிறாள் தன் கண்ணனை தேடுகிறாள் மன காதலை கூறுகிறாள் இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என் அதனையும் கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன் என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்