Intha Veedu |
---|
பாடலாசிரியர் : வாலி
இந்த வீடு நமக்கு சொந்தமில்லை பாடுடா சின்னதம்பி அதனால நமக்கு துன்பமில்லை ஆடுடா சின்னதம்பி
உள்ளவங்க எத்தனையோ வந்து வந்து போனாங்க சந்தையில வெள்ளாட்டு மந்தையைப் போல் ஆனாங்க
இந்த வீடு நமக்கு இந்த வீடு நமக்கு சொந்தமில்லை பாடுடா சின்னதம்பி அதனால நமக்கு துன்பமில்லை ஆடுடா சின்னதம்பி
நம் நாட்டில் ஜாதில்லை என்பதெல்லாம் பொய் சேதி மண் வீட்டில் ஒரு ஜாதி மச்சி வீட்டில் மறு ஜாதி
தேசிய கொடியினிலே மூணுவகை வர்ணந்தான் தேசத்தில் இருக்கிறது மூணுவகை வர்ணம் தான்
ஏழைங்க சிரிப்பினிலே இறைவனைத்தான் காணலாம் அப்படித்தான் நினைச்சிருந்தேன் நானும் இங்கே நாளும்தான்
என்னால இறைவனைத்தான் பார்த்திடவே முடியல நான் பார்த்து இதுவரையில் ஏழை இங்கே சிரிக்கலை
எல்லோரும்தான் சேர்ந்து இங்கே ஏழைகளை அமுக்க அவன் எப்படி சிரிக்க முடியும் அது செப்படி வித்தையா போகும்
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு நம்மோடதான் ராஜா
இந்த வீடு நமக்கு சொந்தமில்லை பாடுடா சின்னதம்பி அதனால நமக்கு துன்பமில்லை ஆடுடா சின்னதம்பி
குப்பையில் கண்டெடுத்த குண்டுமணி நீதாண்டா எப்போதும் சிரிச்சிக்கிட்டு துள்ளுகிற மான்தாண்டா
அப்பா யாரு தெரியவில்லை அம்மா யாரு புரியவில்லை ஆனாலும் உன்னுடைய சொந்தமிங்கே நான்தாண்டா
எல்லோர்க்கும் தகப்பன் என்று இருக்கிறது சாமிதான் எல்லோர்க்கும் வீடு அந்த சாமி தந்த பூமிதான்
இல்லாத ஏழை எல்லாம் நாம் கொண்ட உறவுதான் நல்லோர்கள் வாழ்ந்து எல்லாம் நம்மோட வரவுதான்
ராஜா போல வாழு நம்ம ராஜாங்கம் தான் ஊரு ராஜா போல வாழு நம்ம ராஜாங்கம் தான் ஊரு
பள்ளம் என்ன மேடு என்ன செல்லும் நம்ம தேரு
இந்த வீடு நமக்கு சொந்தமில்லை பாடுடா சின்னதம்பி அதனால நமக்கு துன்பமில்லை ஆடுடா சின்னதம்பி
உள்ளவங்க எத்தனையோ வந்து வந்து போனாங்க சந்தையில வெள்ளாட்டு மந்தையைப் போல் ஆனாங்க
இந்த வீடு நமக்கு இந்த வீடு நமக்கு சொந்தமில்லை பாடுடா சின்னதம்பி அதனால நமக்கு துன்பமில்லை ஆடுடா சின்னதம்பி