Iraivan Enakkoru |
|---|
லா லா லாலால லால லால லா லா
லா லா லாலால லால லால லா லா
இறைவன் எனக்கொரு உலகத்தை படைத்து
இன்பத்தை குவிச்சு வச்சான்
அதில் இருப்பதை எல்லாம் ரசிப்பதற்காக
இளமையை கொடுத்து வச்சான்
இறைவன் எனக்கொரு உலகத்தை படைத்து
இன்பத்தை குவிச்சு வச்சான்
அதில் இருப்பதை எல்லாம் ரசிப்பதற்காக
இளமையை கொடுத்து வச்சான்
வாலிப வேகம் வளர்ந்திடும் போது
வானில் பறக்காதோ
வாழ்க்கையில் ரசனை பிறந்திடும் போது
காதல் சிரிக்காதோ
அழகின் மயக்கத்தில் ஆசையை வளர்த்து
ஆறுதல் காண வச்சான்
அழகின் மயக்கத்தில் ஆசையை வளர்த்து
ஆறுதல் காண வச்சான்
இங்கு ஆணுக்கு பெண்ணை சீதனம் கொடுத்து
ஆட்டத்தை துவக்கி வச்சான்
இறைவன் எனக்கொரு உலகத்தை படைத்து
இன்பத்தை குவிச்சு வச்சான்
அதில் இருப்பதை எல்லாம் ரசிப்பதற்காக
இளமையை கொடுத்து வச்சான்
மேடையில்லாமல் ஆடிடும் காத்தில்
மெல்லிசை பிறந்து வரும்
கோடான கோடி உயிர்கள் மடியில்
கவிதைகள் தவழ்ந்து வரும்
படரும் கொடிக்கொரு பந்தலை அமைத்து
பழுத்து குலுங்க வச்சான்
அதில் பறவைகள் கோடி உறவுக் கொண்டாடி
பசியை மறக்க வச்சான்
ஓடத்தின் மேலே ஊர்வலம் போனால்
உள்ளம் குளிராதோ
ஓசையில்லாமல் பேசிடும் கண்ணில்
உண்மை புரியாதோ
பருவ மனசுக்கு பார்வையைக் கொடுத்து
பாதையை வகுத்து வச்சான்
அதில் படிப்பதற்கென்றும் களிப்பதற்கென்றும்
நேரத்தை ஒதுக்கி வச்சான்
இறைவன் எனக்கொரு உலகத்தை படைத்து
இன்பத்தை குவிச்சு வச்சான்
அதில் இருப்பதை எல்லாம் ரசிப்பதற்காக
இளமையை கொடுத்து வச்சான்