Iru Vizhi Parugum Virundhu

Iru Vizhi Parugum Virundhu Song Lyrics In English


பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி

இரு விழி பருகும் விருந்து இயற்கை சிங்காரம் எவர்க்கும் எந்நாளும் அயர்வை நீக்கும் மருந்து இரு விழி பருகும் விருந்து இயற்கை சிங்காரம் எவர்க்கும் எந்நாளும் அயர்வை நீக்கும் மருந்து இரு விழி பருகும் விருந்து

மந்தை கார்மேக கூட்டமெல்லாம் சொந்த வீடாக எண்ணி மந்தை கார்மேக கூட்டமெல்லாம் சொந்த வீடாக எண்ணி வந்து ஒன்றாக தூங்கும் இந்த மலை மேலே வந்து ஒன்றாக தூங்கும் இந்த மலை மேலே எங்கு பார்த்தாலும் இனித்திடும் காட்சி இன்பத் தேன் சிந்துதே எங்கு பார்த்தாலும் இனித்திடும் காட்சி இன்பத் தேன் சிந்துதே

இரு விழி பருகும் விருந்து


ஆழம் காணாத பள்ளத்திலே பூவில் வண்டாடும் சோலை மேகம் கண்டாடும் தோகை அதில் மின்னல் கொடி போலே ஆழம் காணாத பள்ளத்திலே பூவில் வண்டாடும் சோலை மேகம் கண்டாடும் தோகை அதில் மின்னல் கொடி போலே எங்கு பார்த்தாலும் இனித்திடும் காட்சி இன்பத் தேன் சிந்துதே எங்கு பார்த்தாலும் இனித்திடும் காட்சி இன்பத் தேன் சிந்துதே

இரு விழி பருகும் விருந்து இயற்கை சிங்காரம் எவர்க்கும் எந்நாளும் அயர்வை நீக்கும் மருந்து இரு விழி பருகும் விருந்து